தேன்கனிக்கோட்டையில் துயரம்.. முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி.. கால்நடைகளை விட்டு மேயவிடும் விவசாயிகள்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் பகுதியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கால்நடைகளை மேய விடும் துயரம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம், மல்லேபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். குளிர்ச்சியான இந்த பகுதிகளில் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. 80 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் ரூ.500 வரையில் விற்று வந்ததால் விவசாயிகள் ஓரளவு லாபம் ஈட்டி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால், சாகுபடி செய்த முட்டைகோஸ்களை சந்தைக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் பயிரிடப்பட்ட அனைத்து காய்கறிகளுமே உள்ளூர் சந்தைகளுக்கு வருவதால், காய்கறிகளின் விலைகள் சரிவடைந்துள்ளது.

விவசாயிகள்
அந்த வகையில் முட்டைகோஸ் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்பு ரூ.500-க்கு விற்று வந்த ஒரு மூட்டை முட்டைகோஸ் தற்போது ரூ.160-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் இல்லை. முட்டைகோஸை செடிகளில் பறிக்க ஆகும் கூலி செலவு, போக்குவரத்து செலவு, சந்தைக்கு கொண்டு செல்லும் செலவுகளை பார்த்தால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறினார்கள்.

விவசாயி
இதுகுறித்து கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கெலமங்கலம் பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை அறுவடை செய்து உள்ளூர் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தோட்டங்கள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை வெளிஇடங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அவற்றை பறிக்காமல் பலர் தோட்டங்களிலேயே விட்டு வருகின்றனர்.

இழப்பீடு
மேலும் பலர் கால்நடைகளை மேயவிட்டு வருகின்றனர். மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும் முட்டைகோசுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications