காலையிலேயே கோர விபத்து.. கார், ஆம்னி பஸ் மோதல்.. 3 பேர் பலி! ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆம்னி பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து பொன்னகரம் நோக்கி வந்த காரும், உளுந்தூர்பேட்டையில் இருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டு போடுவதற்காக வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
காலையிலேயே ஏற்பட்ட இந்த விபத்தில் காரில் பயணித்த தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். சதீஷ்குமார் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலையில் ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் சென்றபோது ஆம்னி பஸ்சும் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து அபயக்குரல் எழுப்பினர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் கார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் தர்மபுரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்றும் சதீஷ் குமார் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக வந்ததாக கூறப்படுகிறது. பொன்னகரம் நோக்கி வந்துகொண்டிருந்த போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications