கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி அரசு பேருந்தின் மீது கனரக லாரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்திலிருந்து தப்பிக்க அரசு பேருந்து சாலையோரமாக இருந்த பள்ளத்தில் புகுந்ததால், பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பெங்களூரிலிருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி என்னும் வனப்பகுதியில் பேருந்து சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இரும்பு ஏற்றி வந்த கனரக லாரி, அரசு பேருந்தின் பக்கவாட்டில் உரசி மோதியது.

நிலைமையை புரிந்துக்கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர், சுதாரித்துக்கொண்டு சாலையோரமாக இருந்த பள்ளத்தில் பேருந்தை இறங்கியுள்ளார். இதனால் பேருந்து வனப்பகுதிக்குள்ளாக நுழைந்து லேசாக சாய்ந்தது. பேருந்து லைட்டாக அடி வாங்கினாலும், உள்ளே இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications