கள்ளக்காதல் மோகம்.. இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜோடி!
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றின் கரைப்பகுதியில் கள்ளக்காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அடிபுதூர் அருகே உள்ள கொட்டாவூர் பகுதியை சேர்ந்த குள்ளம்மாள். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனி. பழனிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவருக்கும் அங்கன்வாடி ஆசிரியையாக இருக்கும் குள்ளம்மாளுக்கு இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்தார்கள். இந்த நிலையில் நேற்று மாலை பழனி என்பவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கிருஷ்ணாம்மா மற்றும் அவரது உறவினர்கள் காவல் துறையில் தகவல் அளித்ததனர்.
ஜிபிஎஸ் கருவி மூலம் காவல்துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வந்தனர். அவர் அனுமன் தீர்த்தம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை பின் தொடர்ந்து அவரது உறவினர்கள் போய் பார்த்த போது கள்ளக்காதலர்கள் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து அருந்திய நிலையில் இருந்தனர்.
தாய்-மகளுடன் பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்
இதையடுத்து இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குள்ளம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பழனியின் உடல்நிலையும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இதையடுத்து பழனியும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளக்காதல் மோகத்தால் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் பாராமல் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.