கிருஷ்ணகிரி ஆணவ கொலை.. மகன் & பாட்டியை துடிக்க துடிக்க கொன்ற தந்தை கைது.. தற்கொலைக்கு முயன்றவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெற்ற மகனையே ஆணவக் கொலை செய்த தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்துள்ள ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவரது மகன் சுபாஷ் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தனது மகனின் காதல் குறித்து அறிந்த தண்டபாணி காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காதலைக் கைவிடும்படி வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், சுபாஷ் காதலைக் கைவிடவில்லை.
இதற்கிடையே தந்தை எதிர்ப்பை சுபாஷ் சமீபத்தில் தான் அனுஷாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சுபாஷ் தனது மனைவி அனுஷாவுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்றைய தினம் சுபாஷ் தனது மனைவியுடன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி அருணபதிக்கு டெந்றுள்ளார். சுபாஷின் பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்) வீடும் அங்கே தான் இருந்த நிலையில், அங்கும் சென்றுள்ளார்.
அப்போது அதிகாலை நேரத்தில் அங்கே சென்ற தண்டபாணி அரிவாளை எடுத்து தனது சொந்த மகன் சுபாஷை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். மேலும், தடுக்க வந்த அவரது மனைவி அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரையும் சரமாரியாக வெட்டினார். இதனால் மூன்று பேரும் அப்படியே அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தண்டபாணி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அவர்கள் 3 பேரும் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், சுபாஷ் மற்றும் தண்டபாணியின் தாயார் இந்தச் சம்பவத்தில் பலியானார்கள். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இது குறித்து விசாரிக்க போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளி தண்டபானியை தேடி வந்தனர்.

இதனிடையே மகனை ஆணவக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காதல் திருமணம் செய்த மகன் சுபாஷை ஆணவக் கொலை செய்த தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.
தீர்த்தமலையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தண்டபாணி போலீசார் கைது செய்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்ட போலீசார் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications