ஓசூரை திணற வைத்த கசமுசா ஜோடி.. "கல்யாணம் ஆகாவிட்டால் பூங்காவுக்குள் அனுமதி இல்லை".. பேனரால் சர்ச்சை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதியில்லை என்று போலீசாரால் வைக்கப்பட்ட பேனரை கண்டு பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துவிட்டனர்.. ஓசூரில் மிகவும் பிரபலமான குழந்தைகள் பூங்கா என்று கருதப்படும் இந்த பூங்காவில் என்ன நடந்தது?
ஓசூரில் 152 ஏக்கரில் அமைந்துள்ளது ராமநாயக்கன் ஏரி.. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது..

குழந்தைகள் பூங்கா
இந்த பூங்காவில், நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.. அத்துடன் ஏரிக்கரையையொட்டி இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.. எனவே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.. அதிலும் வார விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படும்.
அந்த அளவுக்கு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஈர்க்கக்கூடிய விதத்தில் இந்த பூங்கா திகழ்ந்து வருகிறது.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஓசூர் பூங்கா - காதல் ஜோடி
ஆனால், குழந்தைகள் பூங்காவில் காதல் ஜோடிகளும் வந்துவிடுகிறார்கள்.. பூங்காவுக்குள் நுழையும் இந்த ஜோடிகள், குழந்தைகள், பெரியவர்கள் கண்முன்னேயே முகம் சுளிக்கும் அளவுக்கு அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு, கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் அமர்ந்து ஆபாச நடவடிக்கையிலும் இறங்கிவிடுகிறார்களாம்..
அதிலும் நைட் நேரத்தில் செக்யூரிட்டிகள் யாருமே இந்த பூங்காவுக்கு இல்லை.. எனவே, சில இளைஞர்கள், இந்த பார்க்கில் நுழைந்து தண்ணி அடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும் பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், பூங்காவை காலை மற்றும் மாலை நேரம் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் திறந்து வருகிறது. பகலில் பூங்காவை மூடிவிடுகிறார்கள்.
போலீஸ் பேனர்
இப்படிப்பட்ட சூழலில், பூங்காவின் நுழைவாயில், நேற்று போலீசார் திடீரென ஒரு பேனரை கொண்டு வந்து வைத்தார்கள்.. அதில், "திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.. மேலும் தமிழக அரசின் முத்திரை, போலீசாரின் முத்திரை, காவல் உதவி எண் போன்றவை அனைத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பூங்காவிற்கு தினமும் வருபவர்கள் இதனை ஆதரித்தாலும், பொதுமக்களில் ஒருதரப்பினர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
இதற்கு பிறகுதான், பூங்காவுக்குள் நுழைந்து எல்லைமீறும் காதலர்களை எச்சரிக்கவே இப்படியான பேனர் வைக்கப்பட்டது தெரியவந்தது.. எனினும், இந்த வாசகம் சர்ச்சையை கிளப்பியது.. சோஷியல் மீடியாவிலும் இந்த பேனர் வைரலானது.. இதைப்பார்த்த இணையவாசிகளும், பேனர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கிவிட்டனர்.
பார்க்கில் காதல் ஜோடிகள்
பூங்காவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.. செக்யூரிட்டிகளை பணிக்கு அமர்த்த வேண்டும்.. இரவு, பகல் என பூங்காவை பாதுகாத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.. இவைகளையும் மீறி காதலர்கள் பூங்காவுக்குள் நுழைந்து அத்துமீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதைவிட்டுவிட்டு இப்படி பேனர் வைப்பதால் என்ன பிரயோஜனம்? என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட துவங்கிவிட்டனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால், அவசர, அவசரமாக அந்த பேனர் அகற்றப்பட்டுவிட்டது.. ஆனால், இந்த பேனரை தாங்கள் வைக்கவில்லை என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.. அப்படியானால் பேனரை வைத்தது யார்? எப்படி அரசு முத்திரையை பேனரில் பயன்படுத்த முடியும்? என்று சந்தேகம் கிளம்பியிருப்பதால், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications