சினிமாவே தோத்துடும்.. எஸ்.ஐ தேர்வில் நூதன முறையில் "காப்பி" அடித்த இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ்
கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில், முக கவசத்தோடு சேர்த்து ஹெட் செட் பயன்படுத்தி தேர்வு எழுதிய கிருஷ்ணகிரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு ஹெட்போன் மூலம் சொல்லிக்கொடுத்த உறவினரும் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கு 1 லட்சத்து 45 ஆயிரத்தும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சப் இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. தேர்வர்களுக்கு பலத்த சோதனை நடத்தப்பட்டது.

செல்போன் மற்றும் மின் சாதன பொருட்களை தேர்வர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெண் தேர்வர்களுக்கு பூ அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையிலும் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பின்னரும் ஒருவர் முக கவசத்தோடு ப்ளூ டூத் ஹெட்போனை பயன்படுத்தி தேர்வு எழுதிய சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. அதாவது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் தேர்வு எழுதும் போது ஹெட்போனை பயன்படுத்தி வெளியில் இருந்து ஒருவரிடம் பதிலை கேட்டு கேட்டு எழுதுவார். அதே பானியில தான் கிருஷ்ணகிரியில் வாலிபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாட்டிகொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அதியமான என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியிலும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 3 ஆயிரத்து 559 தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில், காலையில் நடந்த, பொது அறிவு தாள் தேர்வினை தேர்வர்கள் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது அறையில் இருந்து திடீரென ஒரு சத்தம் கேட்டது.
இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிந்த போலீசார் தேர்வர்கள் அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹெட்போனை பயன்படுத்தி பேராசிரியர் ஒருவரிடம் கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுதுவது போல் ஒரு வாலிபர் முக கவசத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஹெட்போன் மூலம் உறவினர் ஒருவரிடம் இருந்து பதிலை கேட்டு எழுதி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில், அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்குஅவரது உறவினர் ராஜவேல் என்பவர் தான் வெளியில் இருந்து செல்போன் மூலம் தேர்வு எழுத உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜவேலும் கைது செய்யப்பட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications