அட நாராயணா.. பெருமாளுக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள்.. இப்போது ஆற்றுக்குள் கேம்ப்!
கிருஷ்ணகிரி: அட நாராயணா!! மார்க்கண்டேய ஆற்றுப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நடு ஆற்றில் பெருமாள் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் வெடித்தன.

2 என்ஜின்கள்
ஒவ்வொரு இடையூறாக சரி செய்த இப்போது பெருமாள் சிலை கிருஷ்ணகிரி வழியாக கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையை அடைந்தது. ஆனால் வழியில் நிறைய மண் சாலைகள் இருந்ததால், தற்காலிகமாக சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்து, 2 என்ஜின்களும் பொருத்தப்பட்டு லாரி கிளம்பியது.

சமன்படுத்தப்பட்டது
ஆனால் லாரி பாதி தூரம் அந்த சாலை மேடாக இருந்தது. அதனால், லாரியின் டயர்கள் சுற்றும்போது முன்னால் இருந்த என்ஜின்கள் மேலே தூக்கியது. இதையடுத்து லாரி நிறுத்தப்பட்டு, அந்த சாலையும் சமன்படுத்தப்பட்டு மீண்டும் பெருமாள் சிலை கிளம்பியது.

10 அடி உயரம்
ஆனால் இப்போது குருபரப்பள்ளியில் அருகே மார்க்கண்டேய நதியின் பாலம் உள்ளது. அதிக பாரம் உடைய பெருமாள் சிலையை இந்த பாலத்தை கடந்து கொண்டு போக முடியாது என கூறப்பட்டது. அதனால் இந்த பகுதியிலும் மண் சாலை 100 மீட்டர் நீளத்திற்கு 10 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு லாரி இயக்கப்பட்டது.

கற்கள், மண்
ஆனால், மண் சாலையில் பிடிப்பு இல்லாததால் சக்கரம் மீண்டும் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இதனால் நடு ஆற்றிலேயே பெருமாள் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. என்ஜின்களை அதிகமாக கொண்டு வந்து லாரியை இயக்குவதா? அல்லது கற்கள், மண்ணை போட்டு சாலையை மேலும் உயர்த்தி லாரியை இயக்குவதா என ஆலோசனை நடைபெறுகிறது.

நடு ஆற்றில் பெருமாள்
நடு ஆற்றில் சிலை வைக்கப்பட்டு விட்டதால் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தி பெருமாளை சேவித்துவிட்டு செல்கின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications