பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு.. ‛கோழி’ அருள் துப்பாக்கி முனையில் கைது..ஓசூரில் பரபர சம்பவம்
கிருஷ்ணகிரி: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கோழி அருளை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டையை சேர்ந்தவர் கோழி அருள். இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 20க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட போலீஸ் நிலையங்களில் அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.
சாதி ரீதியிலான கொலை, தாக்குதல் உள்ளிட்டவற்றில் இவர் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கிலும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதோடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் கராத்தே செல்வின் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக சென்னையில் வைத்து கட்டதுரையை கொலை செய்த வழக்கு கோழி அருள், ராக்கெட் ராஜா போன்றோர் மீது உண்டு. கோழி அருள் குடும்பம் 1990களில் கோழி கடை வைத்திருந்த காரணத்தால் அவருக்கு இந்த பெயர் வந்ததாக கூறுவார்கள். ராக்கெட் போல வேகமாக தாக்குதல் நடத்தக்கூடியவர் என்று ராக்கெட் ராஜாவிற்கு அந்த அடைமொழி வந்ததை போல கோழி அருளுக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது.
இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்படும் கோழிஅருள் அதன்பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார். இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீசார் பதிந்த வழக்கில் அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கோழி அருளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தனிப்படை போலீசார் கோழி அருள் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதிக்கு சென்றனர்.

கோழி அருள் பதுங்கி இருந்த இடத்தை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோழி அருளை ஓசூரில் இருந்து அம்பாசமுத்திரத்துக்கு போலீசார் வாகனத்தில் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications