தமிழக வாக்காள பெருமக்களே, இறுதி வாய்ப்பு.. ஞாயிறு மிஸ் பண்ணிடாதீங்க..கலெக்டர் முக்கிய அறிவிப்பு
கிருஷ்ணகிரி: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2026 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வேறு ஊர் மாறியவர்கள் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,150 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2026 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் படிவம்-6 உடன் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கடந்த மாதம் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டு இருந்தால் வருகிற 30-ந் தேதி வரை ஆட்சேபனை மற்றும் உரிமைகோரல் காலத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள 1,150 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் அருகில் உள்ள தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று, புதிதாக பெயர் சேர்த்தல் படிவம் 6, பெயரை நீக்குதல் படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கு படிவம் 8, போன்ற படிவங்களை பெற்று பூர்த்திசெய்து வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துகொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும்.
மேலும், வாக்காளர்கள் தாங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க ஏதுவாக https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும், செல்போன்களில் Voters Helpline App செயலியினை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான விவரங்கள் பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications