Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சச்சரவு வேண்டாம்! இருவருக்குமே அங்கீகாரம்! ஒசூர் மேயர் யார்? பரபரக்கும் மறைமுகத் தேர்தல்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தமிழகத்தின் எல்லையோர மாநகராட்சியான ஒசூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா மேயர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதே போல் இதற்கு அடுத்தப்பதவியான துணை மேயர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஷ்வரன் முன்னணியில் இருக்கிறார்.

இவர்கள் இருவருமே தனக்கு முக்கியம் என்பதால் சச்சரவின்றி அவர்களுக்கு மேயர், துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தக்கோரி பரிந்துரை செய்திருக்கிறார் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ்.

ஒசூர் மாநகராட்சி

ஒசூர் மாநகராட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியானது தமிழக எல்லையில் அமைந்திருக்கும் ஒரு மாநகராட்சியாகும். அதோடு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த ஒசூரில் திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றி மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது திமுக. இந்நிலையில் திமுக சார்பில் யார் மேயர் வேட்பாளர் என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

எஸ்.ஏ.சத்யா

எஸ்.ஏ.சத்யா

ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஏ.சத்யா தான் ஒசூர் மேயராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஒசூர் மாநகராட்சியின் துணை மேயராக மாதேஷ்வரனுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவர்கள் இருவருமே மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தளி பிரகாஷுக்கு நெருக்கமானவர்கள். இதனால் இவர்கள் இருவருக்குமே பதவிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட்

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் ஒசூர் மாநகராட்சி மேயர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்ததாகவும் பிறகு அவர்களுக்கு வேறு மாநகராட்சிகளில் துணை மேயர் பதவி தரப்படும் என திமுக தலைமை உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலையோ அல்லது நாளையோ 138 நகராட்சி மற்றும் 21 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு

பதவியேற்பு

இதனிடையே இன்று காலை ஒசூர் மாநகராட்சி மன்றத்தில் கவுன்சிலராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக உறுப்பினர்கள் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை இரவோ அல்லது நாளை மறுதினம் காலையோ அவர்கள் ஒசூர் அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+