தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்
லண்டன்: கென்யா ஏர்வேஸ் விமானத்தில் இருந்து உடல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.41 மணியளவில் தெற்கு லண்டனின் கிளாபாமில் உள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான நபரின் உடல் விழுந்ததாக கென்யா ஏர்வேஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஹீத்ரோ விமான நிலையத்தில் பிற்பகல் 3.50 மணிக்கு விமானம் தரையிறங்கியது.

தரையிறங்குவதற்கு சற்று முன்னர், விமானத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் உடல் விழுந்துள்ளது. இந்த மரணம் 'துரதிர்ஷ்டவசமானது' என்று கூறியுள்ள விமான நிறுவனம், பிரிட்டிஷ் மற்றும் கென்ய அதிகாரிகளின் ஒத்துழைப்பை கேட்டுள்ளது.
இதனிடையே, விமானத்தை பரிசோதித்த போது, பின்புற இடது தரையிறங்கும் கியரில் உணவு மற்றும் உடைகள் அடங்கிய ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு வந்த விமானத்தில் இருந்து பெரும் சத்தத்துடன் ஒன்று விழுந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து பார்த்த போது, நீல நிற சட்டை மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்த நபர் புல்தரையில் விழுந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது, சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும், பெயர் குறிப்பிடபடாத பெண் ஒருவர் கூறியுள்ளார்.
நைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு செல்ல 4,250 மைலை கடக்க வேண்டும். சுமார் எட்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இதே போல், கடந்த செப்டம்பர் 2012 இல், மொசாம்பிக்கைச் சேர்ந்த 30 வயதான ஜோஸ் மாடாடா, அங்கோலாவிலிருந்து ஹீத்ரோ செல்லும் விமானத்தின் அண்டர்கரேஜில் இருந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications