பிரிட்டன் வகை கொரோனா... உலகையே புரட்டிப் போடும்... ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
லண்டன்: மிகவும் வேகமாகப் பரவி வருவதால் பிரிட்டன் வகை கொரோனா நிச்சயம் உலகத்தையே புரட்டிப் போடும் என்று பிரிட்டனின் மரபணு கண்காணிப்பு திட்டத்தின் தலைவர் ஷரோன் மயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கும் கொரோனாவின் தீவிரம் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் பிரிட்டன் நாட்டில் பரவ தொடங்கிய உருமாறிய கொரோனா, வைரஸ் பரவலை மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த வகை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம் என்ற செய்தியும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளையும் மருத்து நிறுவனங்கள் தொடங்கியுள்ளனர்.

மிகப் பெரிய பாதிப்பு
இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம் என்று பிரிட்டனின் மரபணு கண்காணிப்பு திட்டத்தின் தலைவர் ஷரோன் மயில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த உருமாறிய கொரோனா தான் உலகெங்கும் வேகமாகப் பரவி வருவதாகவும் இது உலகில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி
உலகெங்கும் சுமார் 23.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் என பல்வேறு நிறுவனங்களும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. இருப்பினும், உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகப் பலன் அளிக்க அந்த தடுப்பூசிகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உருமாறும் கொரோனா
இது குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர் ஷரோன் மயில் மேலும் கூறுகையில், "தற்போது வரை பிரிட்டன் வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து தடுப்பூசிகளும் பலன் அளித்தே வருகின்றன. இருப்பினும், இந்த பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இவை தொடர்ந்து உருமாறிய கொண்டே வருகின்றன. எனவே, ஒரு கட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறையலாம்" என்றார்.

பிரிட்டன் வகை கொரோனா
பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதைப் போலவே தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க வகை கொரோனா மனிதர்கள் மத்தியில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சித்துள்ளன. ஏற்கனவே, இந்த குறிப்பிட்ட வகை கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் வகையில் மாடர்னா நிறுவனம் தனது தடுப்பூசியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
ஷரோன் மயில் மேலும் கூறுகையில், "பிரிட்டன் வகை கொரோனா மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இவை மிக வேகமாகப் பரவுகின்றன. எனவே, உலகெங்கும் இந்த பிரிட்டன் வகை கொரோனா பரவ வாய்ப்பு அதிகம். இவை தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால், மிக விரைவாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே வைரஸ் பரவலை நிறுத்த ஒரே வழி" என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications