100 நாட்களை தொட்ட விவசாய போராட்டம்.. கையில் எடுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம்.. மார்ச் 8ல் விவாதம்
லண்டன்: வடமாநிங்களில் நடந்து வரும் விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதுவரை இந்திய அளவில் பேசப்பட்டு வந்த போராட்டம் நேற்று சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்த இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறது.
இந்தியாவை உலுக்கி வரும் இந்த விவசாய போராட்டம் குறித்து தற்போது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த விவசாய போராட்டம் குறித்து இணையத்தில் அளிக்கப்பட்டு வந்த மனுக்களாலும், பிரிட்டிஷ் எம்பிக்கள் பலர் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையாலும் விவசாய போராட்டம் குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையான ஹவுஸ் ஆப் காமன்சில் வரும் 8ம் தேதி இந்த விவாதம் நடக்க உள்ளது. விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பெட்டிஷன் கமிட்டி உறுப்பினர்கள், சில எம்பிக்கள் மற்றும் ஒரு அமைச்சர் பேச இருக்கிறார். எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த போராட்டம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய சட்டம் மற்றும் போராட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து கூறி வந்த நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இதை பற்றி விவாதிக்க உள்ளனர். நேற்றுதான் பிரிட்டிஷ் வெளியுவுரை அமைச்சர் டொமினிக் உடன் இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை செய்தார்.
இதில் இரண்டு நாட்டு உறவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்த சட்டத்தை விவாதிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பேச்சு சுதந்திரம் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்க உள்ளனர்.
இந்த விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரபூர்வமாக பேச மறுத்து வந்த நிலையில் தற்போது இந்த விவாதம் நடக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications