கொரோனா தடுப்பூசி.. தொடங்கியது ரஷ்யா.. செம்ம ட்விஸ்ட் கொடுத்த இங்கிலாந்து.. விறுவிறுப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. ரஷ்யா இதற்கான பணிகளை நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. இங்கிலாந்து செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த மாதத்தில் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்க முடியும் என்று நம்புகின்றன. ஏற்கனவே சீனாவிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சீன விஞ்ஞானிகள் ஜனவரி 10 அன்று கொரோனா வைரஸ் மரபணுவை உலகிற்கு பகிர்ந்து கொண்டதில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முயற்சிகள் தொடங்க உள்ளன. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசிகளை வடிவமைக்கத் தொடங்கினர்.

இறுதி கட்டம்

இறுதி கட்டம்

மார்ச் மாதத்தில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் முதல் மருத்துவ பரிசோதனைகள் அமெரிக்காவில் மாடர்னா மற்றும் சீனாவில் சினோவாக் ஆகியோரால் தொடங்கப்பட்டன. இந்தியா, தாய்லாந்து மற்றும் கியூபா உள்ளிட்ட பல தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இந்த முயற்சியில் இணைந்தனர். இன்று இறுதி கட்டத்தில் 3 தடுப்பூசிகளும், மனித சோதனைகள் கட்டத்தில் 13 தடுப்பூசிகள் என மொத்தம் 58 தடுப்பூசிகள் மக்கள் மீது பரிசோதிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தும் தொடக்கம்

இங்கிலாந்தும் தொடக்கம்

கிட்டத்தட்ட நோய் உருவாகி ஓராண்டு கழித்து உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. ரஷ்யா இதற்கான பணிகளை நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. இங்கிலாந்து செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த மாதத்தில் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்க முடியும் என்று நம்புகின்றன. ஏற்கனவே சீனாவிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மனித சோதனை

மனித சோதனை

ஆனால் சாதாரண மக்களுக்கான தடுப்பூசி முயற்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்ன. சில தடுப்பூசிகள் மனித சோதனைகளை நிறைவு செய்த தடுப்பூசியை நம்பியிருக்கின்றன. சில தடுப்பூசிகள் இன்னும் மனித சோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் உள்ளன.

ஃபைசர் தடுப்பூசி

ஃபைசர் தடுப்பூசி

பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி, விரைவில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக நிறைய சான்றுகள் உள்ளன. ஆனால் ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகள் - மில்லியன் கணக்கான ஆரோக்கியமான மக்களுக்கு வழங்கப்பட உள்ள நிலையில் அவற்றின் செயல்திறன் மற்றும பாதுகாப்பு திறன் விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளதாக கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

என்னதான் தடுப்பூசி போட்டாலும், கொரோனா தொற்று லேசான வடிவத்தில் உருவாக்கும் என்று மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள்
ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறார்கள். ஒவ்வொர தடுப்பூசிகளும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு தூண்டுகின்றன என்பதில் வேறுபடுகின்றன. மாடர்னா மற்றும் ஃபைசர் ஒப்பீட்டளவில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது எண்ணெய் குமிழ்களில் இணைக்கப்பட்ட மரபணு மூலக்கூறுகளை உருவாக்குகிறது. ஸ்பூட்னிக் தடுப்பூசி மரபணுக்களில் விதைக்க அடினோ வைரஸ்களைப் பயன்படுத்துகிறது. சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளில் இறந்த கொரோனா வைரஸ்களை பயன்படுத்துகின்றன.

யாரிடமும் இல்லை

யாரிடமும் இல்லை

இதற்கு முன்னர் எந்தவொரு கொரோனா வைரஸுக்கும் உரிமம் பெற்ற மனித தடுப்பூசியை யாரும் உருவாக்கவில்லை, மேலும் எது சிறந்தது மற்றும் மிகவும் பாதுகாப்பாக செயல்படுகிறது என்பதைக் காண உலகம் ஆவலுடன் காத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+