யூகேவில் புகலிடம்.. விஜய் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது.. மத்திய அரசு அதிரடி கோரிக்கை!
லண்டன்: யுனைட்டட் கிங்கிடமில் தஞ்சம் கேட்டு புகலிட கோரிக்கை வைத்த விஜய் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் விஜய் மல்லையா. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லண்டனில் இவருக்கு எதிராக நாடு கடத்தல் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் விஜய் மல்லையா தனது அனைத்து மேல்முறையீட்டிலும் தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடந்த வாரமே இந்தியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யுனைட்டட் கிங்கிடமின் முக்கியமான ரகசிய சட்டம் ஒன்றின் காரணமாக மல்லையாவை நாடு கடத்த முடியவில்லை. ஆனால் இந்த சட்டம் குறித்த முழு விவரங்களை இன்னும் யுனைட்டட் கிங்கிடமின் வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.
ஒரு முக்கியமான சட்டம் காரணமாக நாடு கடத்த முடியவில்லை என்று யுனைட்டட் கிங்கிடமின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுனைட்டட் கிங்கிடமில் தஞ்சம் கேட்டு புகலிட கோரிக்கை வைத்த இருக்கிறார் விஜய் மல்லையா. என்னை நாடு கடத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார் .
Recommended Video
இந்த நிலையில் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது. அவரின் புகலிட கோரிக்கையே யுனைட்டட் கிங்டம் ஏற்க கூடாது, உடனே அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications