எலிசபெத் கிரீடத்தில் இந்தியாவின் கோஹினூர் வைரம்.. ராணி மரணத்தால் வைர கிரீடம் யாருக்கு?
லண்டன்: ராணி எலிசபெத் மரணமடைந்துள்ளதால் அவரிடம் இருந்த கோஹினூர் கிரீடம் தற்போது யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரங்களுள் ஒன்று கோஹினூர் வைரம். இது இந்தியாவிற்கு சொந்தமானது. ஆனால் இங்கு இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு எலிசபெத் ராணியின் கிரீடத்தில் இந்த வைரம் இருக்கிறது.
இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல முறை முயன்றுள்ளது. ஆனாலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது உடல்நலக் குறைவால் ராணி எலிசபெத் காலமாகிவிட்டார்.

சார்லஸ்
இதையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2800 வைரங்களை கொண்ட இந்த கிரீடத்தில் கோஹினூர் வைரம் மகுடமாக உள்ளது.

சார்லஸ் மனைவி டயானா
ராணியின் மகன் சார்லஸின் மனைவி டயானா 1996ஆம் ஆண்டு கார் விபத்தில் பலியான நிலையில் அவர் கமீலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது மன்னராக சார்லஸ் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைர கிரீடம் டச்சஸ் ஆப் கார்ன்வால் கமீலாவிடம் செல்லும்.

ஜார்ஜ் 6ஆவது மன்னர்
இந்த கிரீடம் 1937 ஆம் ஆண்டு ஜார்ஜ் 6-ஆவது மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக உருவாக்கப்பட்டது. அது போல் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்ட வைரக்கல்லும் அந்த கிரீடத்தில் உள்ளது. 105 காரட் எடை கொண்டது கோஹினூர் வைரம். கிரீடத்தின் முன்பு பிளாட்டினத்தினால் செய்யப்பட்ட சிலுவை உள்ளது. விலைமதிப்பே இல்லாத வைர கிரீடம் சார்லஸ் பதவியேற்றதும் கமீலாவின் தலையை அலங்கரிக்கும்.

14 ஆவது நூற்றாண்டு
14 ஆவது நூற்றாண்டுகளில் இந்த கோஹினூர் வைரம் இந்தியாவில் காணப்பட்டது. இது பல 100 ஆண்டுகளில் பலரது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. 1849 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிடம் அளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு இந்தியா உள்பட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. தற்போது அந்த கிரீடம் லண்டன் டவரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications