பிரதமர் பதவியில் 2 வாரம் தான் ரிஷி சுனக் இருக்க போகிறாரா.. பிரிட்டனில் பொது தேர்தல் எப்படி நடக்கும்?
லண்டன்: பிரிட்டன் நாட்டில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குத் தேர்தல் செயல்முறை என்ன.. இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இப்போது ரிஷி சுனக் இருக்கிறார். அங்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குத் தேர்தல் செயல்முறை என்ன.. இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பல ஒற்றுமைகள்: நமது நாட்டில் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கும் பிரிட்டன் பொதுத் தேர்தலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.. ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாடு எப்படி 543 லோக்சபா தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ.. அதேபோல பிரிட்டனும் 650 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் எப்படி எம்பிக்களை தேர்வு செய்கிறோமோ.. அதேபோல அங்கும் ஒவ்வொரு தொகுதியிலும், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றத்தில் அந்த குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதிகளாக இவர்கள் செயல்படுவார்கள்.
வாக்குச் சீட்டு: பிரிட்டன் நாட்டில் வாக்குச் சீட்டு முறையிலே தேர்தல் நடைபெறும். யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். இந்த 650 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். அங்கு இந்த முறை கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அங்கு 650 சீட்கள் இருக்கும் நிலையில், எந்தக் கட்சிக்கு 326 இடங்கள் கிடைக்கிறதோ.. அந்தக் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.
சரி பிரிட்டன் தேர்தலில் யார் வாக்களிக்கலாம்.. அங்கு இந்த முறை வாக்களிக்க சுமார் 5 கோடி பிரிட்டன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர். பிரிட்டன் தேர்தலில் 18 வயதைக் கடந்த அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிக்கும் முன்பு பதிவு செய்திருக்க வேண்டும் என்பதே ஒரே கண்டிஷன் ஆகும். அங்கு இந்த முறை ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.. அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.. தபால் வாக்கு மூலமாகவும் வாக்களிக்க முடியும்.
வாக்கு எண்ணிக்கை: எப்போது பிரிட்டனில் வாக்குப்பதிவு முடிந்து உடன் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். நமது நாட்டை போல இதற்காகத் தனியாக வாக்கு எண்ணிக்கை நாள் எல்லாம் அறிவிக்க மாட்டார்கள். தேர்தல் முடிவுகள் வர வர எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதும் தெரிய வரும். பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சில மணி நேரத்தில் முடிந்துவிடும்.. கிராமப்புற தொகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிய தாமதமாகும்.
தொங்கு நாடாளுமன்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சரிபாதி தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். ஒரு வேளை எந்த கட்சியும் பெரும்பான்மைக்குத் தேவையான 325 இடங்களில் வெல்லவில்லை என்றால் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும். அதுபோன்ற சூழல்களில் பிரதமர் பதவியில் நீட்டிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். ஒரு வேலை பிரதமர் பதவியில் இருப்பவரால் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி ஆட்சியை அமைக்க முடியவில்லை என்றால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால், பிரிட்டனில் நமது நாட்டை போல இல்லை. அங்குக் கூட்டணி ஆட்சி என்பது ரொம்பவே அரிதானது. அங்கு 1945க்குப் பிறகு 2010 கன்சர்வேடிவ்- லிபரல் டெமாக்ராட் இணைந்து கூட்டணி அரசை அமைந்தது. அதேபோல 2017இல் கன்சர்வேடிவ் கட்சி சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருந்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications