விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை.. லண்டன் நீதிமன்றம் அதிரடி
லண்டன்: ஜாமின் நிபந்தனையை மீறிவிட்டதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்ததையும், உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களின் ஊழல் குறித்தும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே (47 வயது).
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா கடந்த 2012ம் ஆண்டு ஜுலியன் அசாஞ்சேவை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறக்கியது. இந்த விஷயத்தில் கைதானால் அமெரிக்காவைச் சேர்ந்த அசாஞ்சே 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.

பலாத்கார புகார்
இதற்கிடையே சுவிடனைச் சேர்ந்த 2 பெண்கள் அசாஞ்சே மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார்கள். இதை வைத்து லண்டனில் இருந்த அவரை கைது செய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டது.

புகாருக்கு மறுப்பு
ஆனால் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்திற்குள் அகதியாக தஞ்சம் புகுந்தார்.

அசாஞ்சே மீது வழக்கு
இந்நிலையில் லண்டனில் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது பாலியல் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜாமின் பெற்று ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து அசாஞ்சே வசித்து வந்தார்.

லண்டன் நீதிமன்றம்
இந்நிலையில் கடந்த மாதம் ஜாமின் நிபந்தனைகளை மீறியதாக லண்டனின் உள்ள சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் ஜுலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார்.இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications