வினேஷ் போகத் அப்பீல் வழக்கு என்னாச்சு.. ஒலிம்பிக் சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் சொல்வது என்ன?
லண்டன்: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் இருந்தது தெரிய வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டில் தீர்ப்பு எப்போது வரும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த போட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 5-0 என்ற கணக்கில் வினேஷ் போகத் அசத்தல் வெற்றியை பெற்றார்.

இதனால், இந்தியர்கள் பதக்க கனவுடன் காத்திருந்த நிலையில், அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியானது. ஒட்டு மொத்த தேசமும் வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தை ஏந்தும் தருணத்தை காத்திருந்த நேரத்தில், எடை கூடுதலாக இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அவரது கனவு தகர்ந்தது. இதைத் தொடர்ந்து பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன் தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கையை வினேஷ் போகத் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 'முதல் நாள் போட்டியில் அவரது உடல் எடை விதிமுறைக்குட்பட்டே இருந்தது. தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை கூடியதே தவிர அவர் இதில் மோசடி செய்யவில்லை' என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக அனபெல் பெனட் (ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று இரவு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்ககப்பட்டது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு நேற்று நீதிபதி அனபெல் பெனட் (ஆஸ்திரேலியா) முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டாலும், வரும் 13-ந் தேதி தான் வெளியாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதாவது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் தீர்ப்பு விவரம் அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்தே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வினேஷ் போகத் வைத்த கோரிக்கை படி வெள்ளி பதக்கத்தை பகிர்ந்தளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications