உங்களுக்கு கேன்சர் வந்திருக்கு.. கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்ப நினைத்து நோயாளிகளை அலறவிட்ட ஆஸ்பத்திரி!
லண்டன்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூற நினைத்து நோயாளிகளுக்கு உங்களுக்கு நுரையீரல் கேன்சர் இருப்பதாக கூறி இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை நோயாளிகளை அலற வைத்துள்ளது.
அதுவும் 8 ஆயிரம் நோயாளிகளுக்கு இப்படி ஒரு குறுந்தகவலை தவறுதலாக அனுப்பி கிறிஸ்துமஸ் தினத்தின் போது மன உளைச்சலுக்கு நோயாளிகளை தள்ளியிருக்கிறது.
அதன்பிறகே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

தனிப்பட்ட முறையில் வாழ்த்து
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் போது சில நிறுவனங்கள் மொத்தமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்புவது வழக்கம். வங்கிகள் உள்ளிட்ட நிதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்திகள் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. பிறந்த நாளின் போது கூட தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்து மெசேஜ்கள் கூட இதுபோன்ற நிறுவனங்கள் அனுப்புவதை பார்த்திருப்போம்.

இடி விழுந்தது போல
இதே பாணியில் தான் இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையின் நோக்கம் நன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் செய்த சிறிய அலட்சியம் சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் தலையில் பெரும் இடி விழுந்தது போல மாறியிருக்கிறது. அது ஏன் என்ற விவரத்தை பார்ப்போம்.

என்ன மெசேஜ் என்று பார்த்த நோயாளிகள்
இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நோயாளிகள் அனைவருக்கும் மொத்தமாக ஒரு மெசேஜ்ஜையும் தட்டி விட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தவர்கள் என பலரும் மருத்துவமனை ஏதோ மெசேஜ் அனுப்புகிறதே என்று பார்த்து இருக்கிறார்கள்.

பலருக்கும் வியர்த்து கொட்டிவிட்டது
அடுத்த நொடி பலருக்கும் வியர்த்து கொட்டிவிட்டது என்றே சொல்லலாம். ஏன் என்றால் உங்களுக்கு தீவிரமான நுரையீரல் கேன்சர் உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் உடல் நலக்குறைவு உள்ள நபர்களுக்கு கிடைக்கும் பலன்களை பெறுவதற்கான படிவமும் இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்து அனுப்புங்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மெசேஜ்ஜை பார்த்து பலரும் பதறிப்போய் மருத்துவமனைக்கு போன் செய்துள்ளனர். அப்போதுதான் மருத்துவமனை தனது தவறை உணர்ந்துள்ளது.

புத்தாண்டு வாழ்த்து என படியுங்கள்
தங்களின் சிறிய தவறால் கிட்டதட்ட 8 ஆயிரம் நோயாளிகளை அலற வைத்து இருக்கிறது இந்த மருத்துவமனை. கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல நினைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கெடுத்து விட்டோமே என உணர்ந்த மருத்துவமனை பிறகு அனைவரிடம் மன்னிப்பு கோரி மெசேஜ் அனுப்பியிருக்கிறது. எங்கள் மெசேஜை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து என படியுங்கள் எனக் கூறி காலில் விழாத குறையாய் மன்னிப்பு கோரி அனுப்பியிருக்கிறது.

மன உளைச்சல் அடைந்த நோயாளிகள்
எனினும், முதல் மெசேஜை படித்து விட்டு பல நோயாளிகள் கடும் அச்சமும் உடைந்து போயும் இருக்கின்றனர். சில நோயாளிகள், ஏதேனும் தவறுதலாக வந்து இருக்கும் என்று ஆச்சர்யத்துடன் இருந்து இருக்கின்றனர். எது எப்படியோ புத்தாண்டு வாழ்த்து எனக்கூறி புத்தாண்டை திகில் அடைய வைத்துவிட்டதே என பல நோயாளிகளும் புலம்பாத குறைதான்..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications