16 வயசு தலித் பெண்.. பாத்ரூமுக்குள் அடைத்து வைத்து.. 3 பேரின் அக்கிரமம்.. அலறி போன உ.பி.!

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பலிடம் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: 16 வயது தலித் பெண்ணை, பாத்ரூமுக்குள் அடைத்து.. 3 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இப்படி ஒரு மாபாதக செயல் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் வசித்து வந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை.. இதனால் குழந்தை பேறு வேண்டி ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளனர். அந்த மந்திரவாதி, ஒரு சிறுமியின் நுரையீரலை வைத்து பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லி உள்ளனர்.

16 year old Dalit girl raped by three in Uttar Pradesh

அதன்படியே, குரில் 20, பீரன் 30, ஆகிய 2 பேரும், அதே பகுதியை 6 வயது சிறுமியை ஏமாற்றி ஒரு காட்டுக்குள் அழைத்து சென்றனர்.. அங்கே சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்தனர்.. அதன்பிறகு கொலை செய்தனர்.. அதன்பிறகு சிறுமியின் வயிற்றை அறுத்து நுரையீரலை எடுத்து கொண்டனர். இப்படி ஒரு அதிர்ச்சி நடந்த அடுத்த சில தினங்களிலேயே மற்றொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

இங்கு எட்டா என்ற கிராமம் உள்ளது.. இங்கு 16 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.. இந்த பெண் ஒரு தலித் சிறுமி.. கடந்த திங்கட்கிழமை, தன்னுடைய தம்பியை அழைத்து கொண்டு, அந்த பகுதியில் பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.. அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் இருந்துள்ளார்.. அவர் அந்த கிராமத்தின் முன்னாள் தலையாரி.. 50 வயதாகிறது.

அவருடன் மேலும் 2 பேர் இருந்திருக்கிறார்கள். சிறுமி பாத்ரூமுக்குள் நுழைவதை 3 பேருமே கவனித்துள்ளனர்.. பிறகு பின்னாடியே சென்று, அந்த பாத்ரூம் கதவை உள்பக்கமாக சாத்திக்கொண்டனர். பாத்ரூமுக்குள் 3 பேர் வந்து நிற்பதை கண்டு, அந்த பெண் அலறினார்... உடனே 3 பேருமே அவரது வாயை பொத்தினர்.. ஒருவர் மாற்றி ஒருவராக அதே பாத்ரூமுக்குள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.. நடந்ததை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று சொல்லி, 3 பேருமே அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அரைகுறை மயக்க நிலையில், அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த அந்த பெண், நடந்ததையெல்லாம் பெற்றோரிடம் சொல்லி கதறினார்.. இதைக்கட்டு பதறிபோன பெற்றோர், ராஜீவ் உட்பட 3 பேர் மீதும் அலிகாஞ்ச் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. ஆனால், எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லையாம்.. இதனால் மேலும் நொந்துபோன பெற்றோர், மாவட்ட மாஜிஸ்திரேட் சுக்லால் பாரதியிடம் புகார் தெரிவிக்கவும், அதற்கு பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+