5 ஸ்டார் ஹோட்டல் தெரியும்.. 5 ஸ்டார் ஜெயில் தெரியுமா.. உ.பி.யில் இருக்கே.. மேட்டர் இதுதான்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள பருக்காபாத் சிறைச்சாலையில் உயர்தரத்தில் உணவுகள் வழங்கப்படுவதால் அந்த சிறைச்சாலைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கியுள்ளது.
ஜெயிலுக்கு போய் களி சாப்பிட போற... என்று நம்மூரில் பேச்சு வழக்கு உண்டு.
ஜெயிலில் கொடுக்கப்படும் உணவுகளின் தரம் மோசமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி , தப்பு பண்ணினால் ஜெயிலில் போய் கஷ்டப்பட வேண்டும் என்பதை உணர்த்த இப்படி பெரியவர்கள் சொல்வார்கள்.

உணவின் தரம்
ஆனால், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு சிறைச்சலை உணவுக்கு பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுத்தம் போன்றவற்றை வைத்து சிறைச்சாலைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த 5 நட்சத்திர அந்தஸ்தை அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதேகர் மாவட்டத்தில் உள்ள பருக்காபாத் சிறைச்சாலைக்கு தான் இந்த 5-ஸ்டார் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

உயர்தர அளவில்
சுமார் 1,144 கைதிகள் உள்ள இந்த சிறைச்சாலையில் பாதுகாப்பான வகையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் உணவுகளும் வித விதமாக சத்து மிக்கதாக, அருமையான பக்குவத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் உணவு தயார் செய்பவர்களும் சுகாதாரத்தோடு பணிபுரிவதாகவும் அதனை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு உயர்தர அளவில் அங்கு உணவு சமைத்து வழங்கப்படுவதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு நடத்தி இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
தற்போது கொடுக்கப்பட்டுள்ள 5 நட்சத்திர அந்தஸ்து மதிப்பீடு ஆகஸ்ட் 18, 2024 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வழங்கப்படும் முன்பாக சிறை ஊழியர்கள் சிலருக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரிகள், உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் இடம், உணவின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

வகைவகையான உணவுகள்
வாரத்தில் 7 நாட்களும் வகை வகையான உணவுகள் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. பருப்பு வகைகள், கொண்டைக் கடலை உள்ளிட்ட வைகளில் உணவுப்பண்டங்கள் செய்யப்பட்டு சுழற்சி முறையில் கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது. காலை உணவாக இரண்டு நாட்கள் கொண்டைக்கடலை, பாவ் ரொட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

பூரி, சப்ஜி, அல்வா
3 நாட்களுக்கு கோதுமை கஞ்சி வழங்கப்படுகிறது. மதிய உணவுக்கு பல்வேறு வகையான பருப்புகளில் செய்யப்படும் தால்கள் வழங்கப்படுகின்றன. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளையில் பூரி, சப்ஜி, அல்வா ஆகியவை வழங்கப்படுகிறது. 30-35 சிறைக்கைதிகள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாள் வழங்கப்படும் உணவின் தரமும் பரிசோதிக்கப்படுகிறது. சிறையில் அளிக்கப்படும் உணவு வகைகள் சிறைக்கைதிகளுக்கு முழு திருப்தி அளிக்கிறது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications