உ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடப்பாண்டில் தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.ஏ) பாய்ந்த 139 பேரில் 76 பேர் பசுவதை குற்றத்துக்காக மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநில செயலாளர் (உள்துறை) அவானிஷ் குமார் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இம்மாநிலத்தில் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை மொத்தம் 139 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பரேலி காவல்துறைக்குட்பட்ட பகுதியில் மட்டும் மொத்தம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 44 வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தின் கீழ் 6 பேர் மீது என்.எஸ்.ஏ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர்களில் 13 பேர் மீதும் என்.எஸ்.ஏ. பாய்ந்துள்ளது. பசுவதை குற்றங்களுக்காக மட்டும் மொத்தம் 76 பேர் மீது என்.எஸ்.ஏ.-ல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன..
கடைசியாக செப்டம்பர் 6-ந் தேதியன்று பரெய்ச் மாவட்டத்தில் கீழ் சலீம் குரேசி என்பவர் மீது பசுவதை குற்றத்துக்காக என்.எஸ்.ஏ.-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் குரேசியை போலீசார் கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு விசாரணையுமே இல்லாமல் ஓராண்டுவரை தடுத்து வைக்க முடியும்.
இதுதவிர பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் மட்டும் ஆகஸ்ட் 26- ந்தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் 1,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications