உ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடப்பாண்டில் தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.ஏ) பாய்ந்த 139 பேரில் 76 பேர் பசுவதை குற்றத்துக்காக மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநில செயலாளர் (உள்துறை) அவானிஷ் குமார் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இம்மாநிலத்தில் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை மொத்தம் 139 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பரேலி காவல்துறைக்குட்பட்ட பகுதியில் மட்டும் மொத்தம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 44 வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தின் கீழ் 6 பேர் மீது என்.எஸ்.ஏ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர்களில் 13 பேர் மீதும் என்.எஸ்.ஏ. பாய்ந்துள்ளது. பசுவதை குற்றங்களுக்காக மட்டும் மொத்தம் 76 பேர் மீது என்.எஸ்.ஏ.-ல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன..
கடைசியாக செப்டம்பர் 6-ந் தேதியன்று பரெய்ச் மாவட்டத்தில் கீழ் சலீம் குரேசி என்பவர் மீது பசுவதை குற்றத்துக்காக என்.எஸ்.ஏ.-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் குரேசியை போலீசார் கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு விசாரணையுமே இல்லாமல் ஓராண்டுவரை தடுத்து வைக்க முடியும்.
இதுதவிர பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் மட்டும் ஆகஸ்ட் 26- ந்தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் 1,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications