சிஏஏ போராட்டத்தை கையாண்ட விதத்தால் கடும் அதிருப்தி.. யோகி அரசுக்கு அலகாபாத் ஹைகோர்ட் சரமாரி கேள்வி
லக்னோ: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கையாண்ட விதத்திற்காக உத்தரபிரதேச அரசு மீது பெருகிய அதிருப்திக்கு மத்தியில், அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது குறித்த குற்றச்சாட்டுகளை அறிந்துகொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், முஷாபர் நகர், வாரணாசி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையில் சுமார் 22 பேர் வரை உயிரிழந்தனர்.

முஸ்லீம்கள் சொத்துக்கள்
இதனிடையே முஸ்லீம்கள் பலரது வீடுகளை போலீசார் தாக்கியதாக புகார்கள் எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பல முஸ்லீம்களின் சொத்துக்களை போலீசார் அழித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

வழக்கறிஞர் கடிதம்
உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தை ஒடுக்க போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் எழுந்தன. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறை, இணையங்கள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்திகளை குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் குமார் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மூன்று உத்தரவுகள்
அந்த கடிதத்தை ஏற்று அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மதூர், நீதிபதிகள் விவேக் சர்மா ஆகியோர் அமர்வு தனாக முன்வந்து மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
கடந்த ஒரு மாதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களின் போது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போலீஸ் வன்முறைகள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. போலீசின் வன்முறைகள் குறித்து அறியவும், மாநிலத்தில் இணையம் முடக்கப்பட்டது குறித்து இன்னொரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
மூன்றாவதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பதில் அளிக்குமாறு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications