ராத்திரியில்.. 50 வயசு பெண்ணை.. கோயிலுக்குள் வைத்தே நாசம் செய்த பூசாரி.. கைது செய்தது போலீஸ்!
50 வயது பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரி கைதானார்
லக்னோ: கோயிலுக்கு சாமி கும்பிட வந்த 50 பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற முக்கிய குற்றவாளியான பூசாரியை உபி போலீசார் கைது செய்துள்ளனர் .
உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தின் உகைட்டி என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் அங்குள்ள அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்தார்.. கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அங்குள்ள கோவிலுக்கு இந்த பெண் அடிக்கடி சென்று வரும்போதுதான், பூசாரி இந்த பெண்ணை கவனித்துள்ளார்.

ஒருநாள் இவரை அடையவும் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பிளான் செய்திருக்கிறார்.. சம்பவத்தன்று இருட்டிய நேரம், அந்த பெண் கோயிலுக்கு சென்றுள்ளார்..
அந்த நேரம் பார்த்து கோயிலுக்குள் ஒருத்தரையும் காணோம். இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டபூசாரி, தன்னுடைய நண்பர்களுக்கு போன் போட்டு காரை கொண்டு வர சொல்லி உள்ளார்.. அந்தபெண்ணை கடத்தி 3 பேரும் நாசம் செய்துள்ளனர். பிறகு ஒரு இரும்பு கம்பியை எடுத்து அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் செருகியும், தாக்கியும் கொன்றுவிட்டு சடலத்தை வீசிவிட்டு சென்றனர்.
பெண்ணை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்யும்போதுதான், டாக்டர்களே மிரண்டு போய்விட்டனர்.. அப்படியே நிர்பயா போலவே இந்த பெண்ணும் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.. அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கினால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது. இது சம்பந்தமாக 2 பேரை போலீசார் அப்போதே கைது செய்துவிட்டனர்.. ஆனால், சம்பந்தப்பட்ட மெயின் நபர் பூசாரியை எஸ்கேப் ஆகியிருந்தார்..
அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது அவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.. அந்த பூசாரி பெயர் சத்யானந்த்.... இவ்வளவு அக்கிரமம் செய்த இந்த பூசாரிக்கு, கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் அதே கிராமத்தில் யாரோ ஒருவர் அடைக்கலம் தந்திருக்கிறார்.
அங்கு பதுங்கியிருந்தபோதுதான் போலீசார் கைது செய்தனர். அந்த கோயிலுக்குள் ஒரு ரூம் இருக்கிறதாம்.. அங்குதான் பூசாரி தங்கி வந்திருக்கிறார். 5 வருஷமாக இதே கோயிலில் அர்ச்சகராக இருப்பதாக சொல்கிறார்கள். சம்பவம் நடந்த அந்த கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கைதான பூசாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications