ராத்திரியில்.. 50 வயசு பெண்ணை.. கோயிலுக்குள் வைத்தே நாசம் செய்த பூசாரி.. கைது செய்தது போலீஸ்!
50 வயது பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரி கைதானார்
லக்னோ: கோயிலுக்கு சாமி கும்பிட வந்த 50 பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற முக்கிய குற்றவாளியான பூசாரியை உபி போலீசார் கைது செய்துள்ளனர் .
உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தின் உகைட்டி என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் அங்குள்ள அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்தார்.. கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அங்குள்ள கோவிலுக்கு இந்த பெண் அடிக்கடி சென்று வரும்போதுதான், பூசாரி இந்த பெண்ணை கவனித்துள்ளார்.

ஒருநாள் இவரை அடையவும் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பிளான் செய்திருக்கிறார்.. சம்பவத்தன்று இருட்டிய நேரம், அந்த பெண் கோயிலுக்கு சென்றுள்ளார்..
அந்த நேரம் பார்த்து கோயிலுக்குள் ஒருத்தரையும் காணோம். இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டபூசாரி, தன்னுடைய நண்பர்களுக்கு போன் போட்டு காரை கொண்டு வர சொல்லி உள்ளார்.. அந்தபெண்ணை கடத்தி 3 பேரும் நாசம் செய்துள்ளனர். பிறகு ஒரு இரும்பு கம்பியை எடுத்து அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் செருகியும், தாக்கியும் கொன்றுவிட்டு சடலத்தை வீசிவிட்டு சென்றனர்.
பெண்ணை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்யும்போதுதான், டாக்டர்களே மிரண்டு போய்விட்டனர்.. அப்படியே நிர்பயா போலவே இந்த பெண்ணும் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.. அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கினால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது. இது சம்பந்தமாக 2 பேரை போலீசார் அப்போதே கைது செய்துவிட்டனர்.. ஆனால், சம்பந்தப்பட்ட மெயின் நபர் பூசாரியை எஸ்கேப் ஆகியிருந்தார்..
அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது அவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.. அந்த பூசாரி பெயர் சத்யானந்த்.... இவ்வளவு அக்கிரமம் செய்த இந்த பூசாரிக்கு, கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் அதே கிராமத்தில் யாரோ ஒருவர் அடைக்கலம் தந்திருக்கிறார்.
அங்கு பதுங்கியிருந்தபோதுதான் போலீசார் கைது செய்தனர். அந்த கோயிலுக்குள் ஒரு ரூம் இருக்கிறதாம்.. அங்குதான் பூசாரி தங்கி வந்திருக்கிறார். 5 வருஷமாக இதே கோயிலில் அர்ச்சகராக இருப்பதாக சொல்கிறார்கள். சம்பவம் நடந்த அந்த கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கைதான பூசாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications