‛‛பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் இடஒதுக்கீடு ஒழிக்கப்படும்’’.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆரூடம்
லக்னோ: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டம் மாற்றம் செய்யப்படும். அதோடு இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பாக குற்றம்சாட்டி உள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டது. தற்போது 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 3 கட்டங்களாக 150க்கும் அதிகமான தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசதங்களில் உள்ள தொகுதிகளுக்கும் இன்னும் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது.

இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார். லக்னோவில் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வேளையில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: தற்போதைய டிரெண்ட்படி பார்த்தால் பாஜக 220க்கும் குறைவான தொகுதிகளில் தான் லோக்சபா தேர்தலில் வெல்லும். ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த முறையை காட்டிலும் பாஜக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வராது. ‛இந்தியா' கூட்டணி தான் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பாஜகவில் இருப்பவர்கள் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள். இதனால் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும். அதோடு இடஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டு விடும். மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛‛பாஜக 400 தொகுதிகளை இலக்கு வைத்துள்ளது. ஆனால் அவர்களுக்கு கிடைப்பது என்பதோ 143 தொகுதிகள் தான். உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டம் 99 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு ஒன்றுமே கிடையாது.
எங்களின் முதன்மை நோக்கம் என்பது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவத தான். ஆம்ஆம்தி, சமாஜ்வாதி உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை அதிகாரத்தில் இருந்த விரட்டியடிப்போம்'' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications