முதலிரவு அறையில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. குழந்தையே பிறந்தாச்சே! எப்படி?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற உடன் புதுப்பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் திருமண விழாவுக்கு வந்த உறவினர்கள் ஷாக்காகினர். இதுபற்றி விசாரித்தபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை குமாரியா கிராமத்தை சேர்ந்தவர் ரிஸ்வான். இவருக்கும் அந்தபகுதியில் உள்ள பஹதுர்கஞ்ச்ச் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்தனர். இந்த வேளையில் அவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டனர். ரிஸ்வான் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
கர்ப்பமான காதலி
இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதுபற்றி ரிஸ்வானிடம் கூறினார். அதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். ஆனால் காதலி மறுத்துவிட்டார். அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதற்கு ரிஸ்வான் தயங்கினார். அதுமட்டுமின்றி அவர் தனது காதலியை தவிர்க்க தொடங்கினார்.
போலீஸிடம் கூறி அழுத பெண்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காதலி சம்பவம் குறித்து தனது கிராமத்தின் அருகே அவுட் போஸ்ட்டில் உள்ள காவலரிடம் கூறி அழுதார். இதையடுத்து இந்த விவகாரம் ஊர் பெரியவர்களிடம் சென்றது. ரிஸ்வான் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து ஊர் பெரியவர்கள் பேசினர். அதன்பிறகு ரிஸ்வான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
திருமணம்- முதலிரவில் பிரசவம்
இருவரின் வீட்டிலும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த பிரச்சனையும் இன்றி திட்டமிட்டப்படி திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவு அறைக்கு ரிஸ்வான் தனது மனைவியுடன் சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் சிகிச்சை அளித்த நிலையில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் தெரிவித்தார்.
கிராமமே பரபரப்பு
இந்த சம்பவம் ராம்பூர் மாவட்டத்தில் பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பான செய்தி இணையதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வேடிக்கையாக கமெண்ட்செய்து வருகினறனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் போலீசுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று அஜீம் நகர் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்ப்பட்டு வந்தாலும் கூட சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதி அமைதியாக உள்ளனர். இதன்மூலம் ரிஸ்வான் தான் குழந்தைக்கு தந்தை என்பது உறுதியாகி உள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications