சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யையும் வாபஸ் பெறாவிட்டால்.... மத்திய பாஜக அரசுக்கு ஓவைசி வார்னிங்
லக்னோ: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போல சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ., என்.ஆர்.சி ஆகியவற்றையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்; இல்லை எனில் டெல்லி ஷாகீன் பாக் (ஷாஹின் பாக், ஷாகின் பாக்) போல உ.பி. வீதிகளில் போராட்டம் வெடிக்கும் என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவைசி எச்சரிக்கை
உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சியின் தலைவர் ஓவைசி தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகிறார். உ.பி.யின் பாரபங்கியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஓவைசி பேசுகையில், சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில் உ.பி.யின் வீதிகளும் டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களம் போல மாற்றப்படும் என்றார்.

பிரதமர் மோடி மீது அட்டாக்
அத்துடன் பிரதமர் மோடியையும் ஓவைசி கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி குறித்து பேசிய ஓவைசி, அவர் மட்டும் அரசியலுக்கு வராமல் சினிமாவுக்கு போயிருந்தால் நிறைய விருதுகளை வாங்கி இருப்பார். பிரதமர் மோடி மாயாஜாலக்காரர். அவர் தம்மை ஹீரோவாக்கி காட்டிக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவும் விடமாட்டார் என்றார்.

முஸ்லிம்கள் ஒற்றுமை
மேலும் சட்டசபைத் தேர்தல்களை கணக்கில் போட்டே விவசாய சட்டங்களை மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். உ.பி.யில் தாக்கூர்கள், பிராமணர்கள், யாதவர்கள், குர்மிகள் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்கும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் ஒன்றாக நின்று வலிமையை காட்ட முடியாது? அன்சாரி, குரேஷி சமூகங்கள் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு உ.பி. பாஜக அரசுதான் காரணம். குரேஷி சமூகத்தின் இறைச்சி கடைகளை மூடியதால் அவர்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் ஓவைசி கூறினார்.

ஷாகீன் பாக் போராட்ட களம்
டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி வரை சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. முஸ்லிம் பெண்கள் இரவும் பகலும் இந்த போராட்டத்தை மிக தீவிரமாக நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பொதுஇடங்களை காலவரையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதே நேரத்தில் ஷாகீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதேபோன்ற போராட்டங்களை உ.பி.யில் நடத்தப் போவதாக எச்சரித்திருக்கிறார் ஓவைசி.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications