சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யையும் வாபஸ் பெறாவிட்டால்.... மத்திய பாஜக அரசுக்கு ஓவைசி வார்னிங்
லக்னோ: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போல சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ., என்.ஆர்.சி ஆகியவற்றையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்; இல்லை எனில் டெல்லி ஷாகீன் பாக் (ஷாஹின் பாக், ஷாகின் பாக்) போல உ.பி. வீதிகளில் போராட்டம் வெடிக்கும் என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவைசி எச்சரிக்கை
உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சியின் தலைவர் ஓவைசி தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகிறார். உ.பி.யின் பாரபங்கியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஓவைசி பேசுகையில், சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில் உ.பி.யின் வீதிகளும் டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களம் போல மாற்றப்படும் என்றார்.

பிரதமர் மோடி மீது அட்டாக்
அத்துடன் பிரதமர் மோடியையும் ஓவைசி கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி குறித்து பேசிய ஓவைசி, அவர் மட்டும் அரசியலுக்கு வராமல் சினிமாவுக்கு போயிருந்தால் நிறைய விருதுகளை வாங்கி இருப்பார். பிரதமர் மோடி மாயாஜாலக்காரர். அவர் தம்மை ஹீரோவாக்கி காட்டிக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவும் விடமாட்டார் என்றார்.

முஸ்லிம்கள் ஒற்றுமை
மேலும் சட்டசபைத் தேர்தல்களை கணக்கில் போட்டே விவசாய சட்டங்களை மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். உ.பி.யில் தாக்கூர்கள், பிராமணர்கள், யாதவர்கள், குர்மிகள் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்கும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் ஒன்றாக நின்று வலிமையை காட்ட முடியாது? அன்சாரி, குரேஷி சமூகங்கள் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு உ.பி. பாஜக அரசுதான் காரணம். குரேஷி சமூகத்தின் இறைச்சி கடைகளை மூடியதால் அவர்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் ஓவைசி கூறினார்.

ஷாகீன் பாக் போராட்ட களம்
டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி வரை சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. முஸ்லிம் பெண்கள் இரவும் பகலும் இந்த போராட்டத்தை மிக தீவிரமாக நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பொதுஇடங்களை காலவரையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதே நேரத்தில் ஷாகீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதேபோன்ற போராட்டங்களை உ.பி.யில் நடத்தப் போவதாக எச்சரித்திருக்கிறார் ஓவைசி.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications