நீங்க உயர் சாதி தான் மாயாவதி புகார்.. இல்லை நான் பிற்படுத்தப்பட்டவன் தான் என கூறும் மோடி
Recommended Video
லக்னோ: உயர் சாதியில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் ஆதாயத்திற்காக தன்னை பின்தங்கிய சாதியில் பிறந்தவர் என கூறிக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் போன்று பிரதமர் மோடி பின்தங்கிய சாதியில் பிறந்தவர் அல்ல என்று கூறினார்.

உயர் சாதியில் பிறந்த மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அரசியல் ஆதாயத்திற்காக தனது சாதி சான்றிதழில் ஓபிசி என திருத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மோடி முன்பு உயர்சாதி பட்டியலில் தான் இருந்தார் என மாயாவதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயம் மற்றும் பிறபடுத்தப்பட்டோரின் வாக்குகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தான், பிரதமர் மோடி தனது சாதியை மாற்றிக் கொண்டுள்ளதாக கடுமையாக சாடினார் மாயாவதி.
ஆனால் மாயாவதியின் மேற்கண்ட குற்றச்சாட்டை பிரதாம் மோடி உறுதிபட மறுத்துள்ளார். இது குறித்து தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், எனக்கு சாதி அரசியலில் நம்பிக்கை இல்லை. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் தான். ஆனால் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பாடுபடுகிறேன் என கூறினார்.
மேலும் தன்னை சாதி அரசியலுக்குள் இழுக்க முடியாது என்று கூறிய மோடி, அம்பேத்கரை அவமானப்படுத்திய சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள மாயாவதி, எனக்கு எதிராக எந்த சூழ்ச்சி செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும் என்றார். பிரதமரின் சாதியை மையப்படுத்தி மாயாவதி கூறியுள்ள புகார், உத்ததிரப்பிரதேச தேர்தல் களத்தில் மையப் பொருளாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications