இதுதான் முதல்முறை.. மோடியை நேரடியாக தாக்கி பேசிய பிரியங்கா.. என்ன சொன்னார் தெரியுமா?
முதல்முறையாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரச்சாரம் செய்துள்ளார்.
Recommended Video

லக்னோ: முதல்முறையாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரச்சாரம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக இன்றில் இருந்து உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கங்கை நதியில் படகில் சென்றபடி பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் பிரச்சாரத்தில் முதல் நாளே பிரதமர் மோடியை தாக்கி பிரியங்கா பேசினார். கடைசி நாள் இவர் வாரணாசியில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் எதிர்காலம்
பிரியங்கா தனது பேச்சில் நாம் வாக்களிக்கும் முன் யோசித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த நாட்டின் எதிர்காலத்தை அப்படியே மாற்ற கூடியது.

மாயாவதி குறித்து
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எங்கள் மீது கோபம் கொள்ள தேவையில்லை. இது கோபப்படுவதற்கான நேரம் கிடையாது. நம்முடைய ஒரே குறிக்கோள் பாஜகவை வீழ்த்துவது மட்டுமே. நாம் அதுதான் சேர்ந்து செய்ய வேண்டும்.

மோடி குறித்து
மோடி பணக்கார மக்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். தொழில் அதிபர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர் விவசாயிகளுக்காக திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அவர் ஏழை மக்களை கவனிக்கவில்லை.

யாருக்கு காவலாளி
பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறுகிறார். தன் பெயருக்கு முன்னே டிவிட்டரில் காவலன் என்று போட்டுக்கொள்கிறார். அது அவரது விருப்பம். அவர் ஏதாவது செய்யட்டும். ஆனால் மோடி மக்களின் காவலாளி கிடையாது. அவர் பணக்காரர்களின் காவலாளி மட்டும்தான், என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications