மழை நீரில் மூழ்கிய பயிர்கள்.. உடனே நிவாரணம் வழங்க உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத்.. சர்வே பணி தீவிரம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் 2 முறையாக உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்தது. மொரடாபாத் உள்பட பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக மொரடாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் மாநில அரசு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே தான் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இதில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விவாதித்தார். மேலும் மழை வெள்ளத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் சில முக்கிய அறிவுகளை வழங்கினார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத், அமைச்சரவை கூட்டத்தில் கூறியதாவது:
‛‛ஒவ்வொரு பகுதிகளிலும் மழைநீர் முறையாக வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். அதோடு ஒவ்வொரு ஆறுகளிலும் அபாயக்கட்ட அளவை தண்ணீர் தொடும் நிலையில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்காக அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்த சர்வே பணிகளை தொடங்க வேண்டும்'' என அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவை தொடர்ந்து மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட மொரடாபாத் மாவட்ட கலெக்டர் மன்வீந்திரா சிங் கூறுகையில், ‛‛சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. யாருடைய நிலத்திலாவது சர்வே பணி மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அந்த விண்ணப்பத்தின் மீது அடுத்த 72 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications