இன்னும் 15 நாட்களில் பிறக்க போகும் குழந்தை.. முகத்தைக் கூட பார்க்காமலேயே இறந்த விமானி அகிலேஷ் குமார்
லக்னோ: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இணை விமானி அகிலேஷிற்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க போகும் நிலையில் அதன் முகத்தைக் கூட பார்க்காமல் சென்றுவிட்டதாக அவரது உறவினர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் விமானி தீபக் வசந்த் சாத்தே, இணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த விபத்தில் இறந்த அகிலேஷுக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க போகிறதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தார்கள். யார் இந்த அகிலேஷ் என்பதை பார்ப்போம்.

கர்ப்பிணி மனைவி
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அகிலேஷ் குமார் (32). இவரது மனைவி மேகா. இவர்களுக்கு 2017இல் திருமணம் ஆனது. மேகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அகிலேஷிற்கு இரு இளைய சகோதரர்கள், ஒரு சகோதரி, பெற்றோர் உள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை பார்த்த அகிலேஷ் பின்னர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க சென்றுவிட்டார்.

அகிலேஷ்
இவர் நேற்று முன் தினம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த போது அவரை விமான குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். இவர் ஏர் இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு முதல் விமானத்தை இயக்கி வருகிறார். வந்தே பாரத் திட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக கோழிக்கோடு- துபை- கோழிக்கோடு செல்ல மே மாதம் நடந்த மீட்பு பணிகளில் முதல் அதிகாரி அகிலேஷ்தான்.

கண்ணியமானவர்
இதனிடையே உயிரிழந்த அகிலேஷ் குறித்து உறவினர்கள் கூறுகையில் அகிலேஷுக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது. அந்த குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் போய்விட்டாரே என கண்ணீர் மல்க தெரிவித்தார்கள். மேலும் இவர் நல்ல நடத்தை உள்ளவர், கண்ணியம், பணிவானர் என உடன் பணியாற்றியோர் தெரிவிக்கிறார்கள்.

30 ஆண்டுகள்
விமானி தீபக் வசந்த் சாத்தே மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இந்த விபத்தில் இருவரும் தங்கள் உயிரை தியாகம் செய்து 180 பேரின் உயிர்களை காப்பாற்றினர். ஒரு வேளை எரிப்பொருளை காலி செய்யாமல் இருந்திருந்தால் விமானம் தீப்பற்றி எரிந்திருக்கும், பலி எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications