ஷாக்.. ஆளுநர் கான்வாயில் திடீரென மோதிய கார்! பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்! இரவில் நடந்த பரபரப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சென்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கான்வாயில் கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஆரிப் முகமது கான் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியால் இது நடந்துள்ளதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரளா ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகமது கான். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவிலேயே அவர் காரில் டெல்லி நோக்கி புறப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான் பாதுகாப்புக்காக அவரது காரின் முன்பும், பின்னும் போலீசார் சென்றனர். இந்த கான்வாய் செக்டார் 113 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கருப்பு நிற ஸ்கார்ப்பியோ கார் திடீரென ஆளுநர் கான்வாயில் நுழைந்ததோடு போலீஸ் வாகனத்தின் மீது மோதியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ஆளுநர் ஆரிப் முகமது கானின் பயணம் தடைப்படவில்லை. அவர் தொடர்ந்து டெல்லி சென்றார். முன்னதாக விபத்தை ஏற்படுத்தியதும் காரில் இருந்த 2 பேர் வேகமாக தப்பிக்க முயன்றனர். இருப்பினும் போலீசார் உடனடியாக அவர்களை மடக்கி பிடித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் காசியாபாத்தை சேர்ந்த மோனு குமார், கவுரவ் சோலங்கி என்பது தெரியவந்தது. இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்), 353 (அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் அல்லது தாக்குதல்) உள்பட மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி நொய்டா கூடுதல் துணை கமிஷனர் சக்தி மோகன் அவஸ்தி கூறுகையில், ‛‛வேகமாக வந்த கார் ஆளுநரின் கான்வாயில் சென்ற டிராபிக் போலீஸ்காரர்கள் பயணித்த காரில் மோதியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைதான 2 பேரிடம் விசாரித்து வருகிறோம்'' என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications