பள்ளிகளில் தேர்வுகள் ரத்து.. 1முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் 'ஆல் பாஸ்' .. உ.பி. அரசு அதிரடி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தலால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 8வது வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவரும் பாஸ் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று மதியம் நிலவரப்படி 149 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உத்தரப்பிரதேச அரசு அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை மூடி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 16 முத்ல் 23 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது . அதன்பிறகு மார்ச் 28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது உத்தரப்பிரதேச அரசு ஏப்ரல் 2 வரை விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உத்தரப்பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் பிறப்பித்துள்ளார்.
அவர் தனது உத்தரவில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், எனவே ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் உயர் வகுப்பிற்கு செல்லப்போகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வெளிநாட்டவர் உள்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications