கொரோனா தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த நர்ஸ்களின் பெயர்கள்... உபி-இல் பெரும் குழப்பம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாகத் தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த, ராஜினாமா செய்த நர்ஸ்களின் பெயர்களும் இடம்பெற்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகம் நேற்று தொடங்கியது. அதேபோல பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் இன்று காலை தொடங்கியது.

தடுப்பூசி
முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. முதல்கட்டத்தில் தடுப்பூசி பெறுபவர்களை அடையாளம் காணும் பணிகளை தற்போது மாநில அரசுகள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் தன் மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், நர்ஸுகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் பட்டியலை தயார் செய்து வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் குழப்பம்
உத்தரப் பிரதேச அரசு தயார் செய்துள்ள இந்தப் பட்டியலில் தான் தற்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அயோத்தி சுகாதாரத் துறை தயார் செய்யப்பட்டுள்ள பட்டியலில் உயிரிழந்த, ஓய்வு பெற்ற மற்றும் ராஜினாமா செய்த நர்ஸுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

நடவடிக்கை எடுக்கப்படும்
உத்தரப் பிரதேச அரசு தயார் செய்துள்ள பட்டியலில் இருக்கும் குழப்பம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் உத்தரவிட்டுள்ளார். இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

குழப்பம் ஏன்
இந்தப் பட்டியல் மூன்று மாதங்களுக்கு முன் தயார் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது இதைச் சரி பார்த்து உயிரிழந்த, ஓய்வு பெற்ற மற்றும் ராஜினாமா செய்த நர்ஸுகளின் பெயர்களை நீக்க அலுவலர்கள் தவறியதாலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பணிகள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 852 மையங்களில் வரும் 16ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் இருக்கும் சுமார் 1,500 மையங்களில் தடுப்பூசி வழங்கும் ஒத்திகையும் நடைபெற்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications