"குடும்ப ஐடி திட்டம்.." நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்க்க யோகி அரசு பிளான்!
அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்க்க உத்தர பிரதேச அரசு புதிதாக குடும்ப ஐடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
லக்னோ: அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்ப்பதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அந்த மாநிலத்தில் குடும்ப ஐடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடந்த ஜனவரி மாதம் 12 இலக்கங்கள் கொண்ட குடும்ப அடையாள எண் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 17 அரசு துறைகளின் தரவுகளை இணைக்க கோரப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் இல்லாத மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறாத குடும்பங்களுக்கு இலவச அல்லது மலிவான ரேஷன் வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த குடும்ப ஐடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது உத்தர பிரதேசத்தில் 3.6 கோடி குடும்பங்கள் மற்றும் 15 ஆதார் சரிபார்க்கப்பட்ட்ட ரேஷன் கார்டுகள் பற்றிய தரவுகள் மாநில அரசிடம் உள்ளன. ரேஷன் கார்டு எண் குடும்ப அடையாள எண்ணாக இருப்பதால், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு தற்போது இந்த குடும்ப ஐடி எண் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேரடியாக நலத்திட்டங்கள் சென்று அடைவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை உத்தர பிரதேச அரசு செயல்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் அந்த மாநில அரசு செயல்படுத்தி வரும் குடும்ப திட்டம் ( Kutumba project ) போல இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் வசித்து வரும் குடும்பங்களுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், அனைத்து பயனாளி குடும்பங்களுக்கும் குடும்ப அடையாள அட்டைகளை வழங்குவோம் என்று நம்பிக்கை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் மூலமாக பயனாளிகளுக்கு நேரடியாக நலத்திட்டங்களை கொண்டு சேர்த்தது பாஜகவிற்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. இத்தகைய நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த குடும்ப ஐடி திட்டம் மூலமாகவும் பயனாளிகளின் மத்தியில் பாஜகவிற்கு மேலும் வலு சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications