"குடும்ப ஐடி திட்டம்.." நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்க்க யோகி அரசு பிளான்!
அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்க்க உத்தர பிரதேச அரசு புதிதாக குடும்ப ஐடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
லக்னோ: அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மத்தியிலும் கொண்டு சேர்ப்பதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அந்த மாநிலத்தில் குடும்ப ஐடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடந்த ஜனவரி மாதம் 12 இலக்கங்கள் கொண்ட குடும்ப அடையாள எண் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 17 அரசு துறைகளின் தரவுகளை இணைக்க கோரப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் இல்லாத மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறாத குடும்பங்களுக்கு இலவச அல்லது மலிவான ரேஷன் வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த குடும்ப ஐடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது உத்தர பிரதேசத்தில் 3.6 கோடி குடும்பங்கள் மற்றும் 15 ஆதார் சரிபார்க்கப்பட்ட்ட ரேஷன் கார்டுகள் பற்றிய தரவுகள் மாநில அரசிடம் உள்ளன. ரேஷன் கார்டு எண் குடும்ப அடையாள எண்ணாக இருப்பதால், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு தற்போது இந்த குடும்ப ஐடி எண் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேரடியாக நலத்திட்டங்கள் சென்று அடைவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை உத்தர பிரதேச அரசு செயல்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் அந்த மாநில அரசு செயல்படுத்தி வரும் குடும்ப திட்டம் ( Kutumba project ) போல இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் வசித்து வரும் குடும்பங்களுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், அனைத்து பயனாளி குடும்பங்களுக்கும் குடும்ப அடையாள அட்டைகளை வழங்குவோம் என்று நம்பிக்கை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் மூலமாக பயனாளிகளுக்கு நேரடியாக நலத்திட்டங்களை கொண்டு சேர்த்தது பாஜகவிற்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. இத்தகைய நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த குடும்ப ஐடி திட்டம் மூலமாகவும் பயனாளிகளின் மத்தியில் பாஜகவிற்கு மேலும் வலு சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.
-
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு












Click it and Unblock the Notifications