டிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உபி போலீசார் தேடி வந்த தொடர் கொலைகாரரான அஸ்வினி குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல டிக்டாக் தொடர் கொலைகாரனான அஸ்வினி குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸ்வினி குமார் ஒரு டிக்டாக் பைத்தியம். வில்லன்கள் பேசும் டயலாக்குகளை எல்லாம் டிக்டாக் செய்து பதிவிடுவது குமாரின் வழக்கம். நிஜ வாழ்விலும் அஸ்வினி குமார் வில்லன் தான். நிறைய குற்ற சம்பவங்களில் தொடர்புடையவன்.

கடந்த 5 நாட்களில் மூன்று பேரை கொலை செய்திருக்கிறான் அஸ்வினி குமார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரின் 25 வயது மகன் மற்றும் 26 வயதான அவருடைய மருமகனை அஸ்வினி குமார் சுட்டுக்கொன்றான். மேலும் ஒருவரையும் அஸ்வினி குமார் கொலை செய்தான்.
இதையடுத்த அஸ்வினி குமாரை அதிபயங்கர குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த உத்தர பிரதேச காவல் துறை, அவனை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் பிஜ்னார் எனும் இடத்தில் அஸ்வினி குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
பிஜ்னாரில் உள்ள நாகினா எனும் இடத்தில் பேருந்தில் ஏறி வேறு ஊருக்கு தப்பிக்க முயன்றான் அஸ்வினி குமார். அப்போது அவனை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் மாட்டிக்கொண்டதை தொடர்ந்து, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான் அஸ்வினி குமார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications