டிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உபி போலீசார் தேடி வந்த தொடர் கொலைகாரரான அஸ்வினி குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல டிக்டாக் தொடர் கொலைகாரனான அஸ்வினி குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸ்வினி குமார் ஒரு டிக்டாக் பைத்தியம். வில்லன்கள் பேசும் டயலாக்குகளை எல்லாம் டிக்டாக் செய்து பதிவிடுவது குமாரின் வழக்கம். நிஜ வாழ்விலும் அஸ்வினி குமார் வில்லன் தான். நிறைய குற்ற சம்பவங்களில் தொடர்புடையவன்.

கடந்த 5 நாட்களில் மூன்று பேரை கொலை செய்திருக்கிறான் அஸ்வினி குமார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரின் 25 வயது மகன் மற்றும் 26 வயதான அவருடைய மருமகனை அஸ்வினி குமார் சுட்டுக்கொன்றான். மேலும் ஒருவரையும் அஸ்வினி குமார் கொலை செய்தான்.
இதையடுத்த அஸ்வினி குமாரை அதிபயங்கர குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த உத்தர பிரதேச காவல் துறை, அவனை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் பிஜ்னார் எனும் இடத்தில் அஸ்வினி குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
பிஜ்னாரில் உள்ள நாகினா எனும் இடத்தில் பேருந்தில் ஏறி வேறு ஊருக்கு தப்பிக்க முயன்றான் அஸ்வினி குமார். அப்போது அவனை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் மாட்டிக்கொண்டதை தொடர்ந்து, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான் அஸ்வினி குமார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications