Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகரித்த கலவரம்.. பல இடங்களில் மத மோதல்.. உ.பி போலீசாருக்கு விடுமுறை ரத்து.. யோகி ஆக்சன்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தியாவில் சில இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடக்கும் நிலையிலும், பண்டிகைகளை கருத்தில் கொண்டும் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுப்பில் உள்ள அனைவரும் 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சில வாரங்களாக மத ரீதியிலான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. சில இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்தர பிரதேசத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விடுமுறை ரத்து

விடுமுறை ரத்து

அதாவது ரம்ஜான், அக்ஷய திருதியை பண்டிகைகள் மே 3ல் ஒரே நாளில் வருகின்றன. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட எஸ்பி முதல் அனைத்து போலீசாருக்கும் , நிர்வாக அதிகாரிகளுக்கும் மே 4 வரை விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. தற்போது விடுப்பில் உள்ளவர்கள் 24 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

கூடுதல் போலீசார்

கூடுதல் போலீசார்

மேலும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும். மேலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். காலை, மாலையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வரும் நாட்களில் மதம்சார்ந்த முக்கிய விழாக்கள் நடக்கின்றன. ரம்ஜான் பண்டிகையும் அக்ஷய திரிதியையும் ஒரேநாளில் வர வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு போலீசார் சுறுசுறுப்பாகவும், விழிப்பாகவும் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஊர்வலங்களுக்கு அனுமதி

ஊர்வலங்களுக்கு அனுமதி

மேலும், ‛‛ஒவ்வொருவருக்கும் அவரவர் மத சித்தாந்தத்தின்படி வழிபாடு, விழாக்களை கொண்டாட சுதந்திரம் உள்ளது. இருப்பினும் யாருக்கும் இடையூறு இன்றி மைக்குகள் பயன்படுத்தி விழாக்களை கொண்டாட வேண்டும். உரிய அனுமதியின்றி மதம் சார்ந்த ஊர்வலம் நடத்தக்கூடாது. பாரம்பரியமான மதஊர்வலங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். புதிய ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்க கூடாது.

 எழுதி வாங்க வேண்டும்

எழுதி வாங்க வேண்டும்

மேலும் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பு அமைதி, நல்லிணக்கத்தை பேணுவது குறித்து எடுத்து கூறுவதோடு அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் எழுதி வாங்க வேண்டும். விழாக்காலங்களில் தவறான கருத்துகளை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 24 மணி நேரத்தில் போலீசார் தரப்பில் மததலைவர்கள், பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+