Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி விழாவில் அரங்கேறிய திருட்டு.. பூந்தொட்டிகளை கூட்டம் கூட்டமாக தூக்கி சென்ற மக்கள்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 65 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவின்போது பிரதமர் மோடியை வரவேற்க சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டிகளை பொதுமக்கள் போட்டி போட்டு தூக்கி சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல் (Rashtriya Prerna Sthal) என்ற பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளையொட்டி அங்கு வாஜ்பாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கலச் சிலைகளும், 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவ அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவிடம், சிலைகள், அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்தார். இங்கு ஹெலிபேட், பொதுக்கூட்ட மைதானம், கபிடேரியா, மல்டி பர்பஸ் ஹால், இயற்கை எழில் மிகுந்த தோட்டம், ஓபன் ஏர் தியேட்டர் உள்பட பல வசதிகள் உள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக லக்னோவின் மேம்பாட்டு வாரியம் மற்றும் லக்னோ மாநகராட்சி சார்பில் சாலையோரங்கள் பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் தோட்டம் உள்ளிட்டவற்றை அமைத்து இருந்தன. ஆந்திரப் பிரதேசம், நைனிடால், டெல்லி, புனே போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 1.5 லட்சம் அழகிய அலங்கார தாவரங்கள் கொண்டு வரப்பட்டது.

லக்னோ வசந்த் கஞ்ச் ரோடு மற்றும் மோடி திறந்து வைத்த நினைவிடத்தை சுற்றி பல சாலைகளில் அலங்காரத்துக்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. இது பார்க்க பசுமையாக காட்சியளித்தது. ஆனால் பிரதமர் மோடி விழா முடித்து புறப்பட்ட சென்ற பிறகு பலரும் போட்டி போட்டு பூந்தொட்டிகளை தூக்கி சென்றனர். சிலர் வாகனங்களில் வந்து பூந்தொட்டிகளை போட்டி போட்டு தூக்கி சென்றனர்.

இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. இதனை பார்க்கும் பலரும் பூந்தொட்டிகளை தூக்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லக்னோ போலீஸ் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+