உ.பியில் 3 முறை எம்எல்ஏ.. நடுரோட்டில் படுகொலை.. யோகிக்கு எதிராக திரும்பும் பிராமண அரசியல்!
லக்னோ: மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நில தகராறில் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் உத்தரப்பிரசேத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலத்தை அபகரிக்கும் கும்பல் ஆயுதங்களுடன் வந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா (75 வயது) மற்றும் அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா இதை எதிர்த்தனர். ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையம் அருகே இரு தரப்பு மோதலின் போது முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா அந்த கும்பல் கொடூரமாக தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தில் அவரது மகனையும் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சாலையில் போராட்டம்
முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ராவின் மரணத்திற்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கூடினர். அவரது சடலத்தை திரிகோலியா பேருந்து நிலையம் அருகே சாலையில் வைத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

நில விவகாரம்
மிஸ்ராவுக்கும் சமீர் குப்தா மற்றும் ராதேஷ்யம் குப்தா ஆகியோருடன் நில விவகாரத்தில் மோதல் இருந்து வந்துள்ளது இந்த மோதலின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நிகாசன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நிர்வேந்திர குமார் மிஸ்ரா. இரண்டு முறை சுயேட்சையாக வெற்றி பெற்றவர். ஒரு முறை சமாஜ்வாடி கட்சி சார்பில் வென்றுள்ளார். முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போட்டிபோட்டு கண்டனம்
இந்த கொலை சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் யோகியின் ஆட்சியின் அவலம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

உயர்ஜாதியினரை இழுக்க
ஏற்கனவே விகாஸ் சிங் போலீசாரால் எண்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு பிராமண பிரபலமான நிர்வேந்திர குமார் மிஸ்ரா கொல்லப்பட்டிருப்பது உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களுக்கு எதிராக செயல்கள் நடைபெறுவதாக அங்கு அரசியல் வேகமெடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் உயர்ஜாதிகளை கவர்ந்திழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் வேளை
இந்நிலையில் பிராமண பிரபலங்கள் அடுத்தத்து கொல்லப்பட்டிருப்பதை அரசியல் ரீதியாக பாஜகவிற்கு எதிராக கடுயைமான பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக யோகி ஆதித்யாநாத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications