உ.பி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்.. அனைத்து நோய்க்கும் இலவச சிகிச்சை.. பிரியங்கா காந்தி உறுதி!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பிலும் பாஜக வெற்றி பெறும் என்று கூறுகிறது.
ஆனாலும் பா.ஜ.க.வுக்கு அதிருப்தி அலை வீசுவதால் இந்த முறையாவது பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை
இதனால் காங்கிரஸ் இப்போதிருந்தே பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் அமைத்து வருகிறார். இந்த நிலையில் கட்சி உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துளளார்.

சுகாதார அமைப்பின் மோசமான நிலை
''உ.பி.யின் சுகாதார அமைப்பின் மோசமான நிலையை அனைவரும் பார்த்தனர். கொரோனா காலத்திலும், தற்போது காய்ச்சல் பரவும் காலத்திலும் அரசின் அலட்சியம் தெளிவாக தெரிந்தது. நல்ல மற்றும் மலிவான சிகிச்சையை உறுதி செய்வதற்காக, தேர்தல் அறிக்கைக் குழுவின் ஒப்புதலுடன், உ.பி.யில் எந்த நோய்க்கும் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது'' என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.

7 வாக்குறுதிகள்
உத்தரபிரதேசத்தில் இதுவரை காங்கிரஸ் 7 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி மற்றும் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று சில நாட்களுக்கு முன்பு யாத்திரையை தொடங்கி வைத்த பிரியங்கா காந்தி தெரிவித்தார். மேலும், கோதுமை மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500க்கும், கரும்புக்கு குவிண்டால் ரூ.400க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு ஸ்கூட்டி.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்றும் இளங்கலை மாணவர்களுக்கு மின்னணு ஸ்கூட்டி. வழங்கப்படும் என்றும் ஏற்கனவே பிரியங்கா அறிவித்து இருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியில் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா












Click it and Unblock the Notifications