'பளார்..' உபி-இல் மேடையிலேயே எம்எல்ஏவை அறைந்த விவசாயி.. பரபர வீடியோவுக்கு பாஜகவின் விளக்கம் என்ன??
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மேடையிலேயே பாஜக எம்எல்ஏ ஒருவரை விவசாயி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக வித்தியாசமான ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது.
Recommended Video
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.
உபி-இல் பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகிறது. இருப்பினும், அங்கு பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

உத்தரப் பிரதேசம்
அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியே நேரில் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார். இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே விவசாயி ஒருவர் பாஜக எம்எல்ஏவை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சுமார் 21 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் வீடியோவில் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மேடை ஒன்றில் அமர்ந்துள்ளார். அப்போது வயதான விவசாயி ஒருவர் மேடையில் ஏறி, எம்எல்ஏ அருகே வருகிறார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பாஜக சட்டசபை உறுப்பினரை அந்த விவசாயி பளார் என ஒரு அறை விடுகிறார். உடனடியாக அந்த விவசாயியைச் சிலர் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும், அவரிடம் கேள்வி எழுப்பியவாறே மேடையில் இருந்து அழைத்துச் செல்கின்றனர்.

ஒரே அறை
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. மூத்த பாஜக தலைவர் கல்யாண் சிங்கின் பிறந்தநாளான ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்ற விழாவின் போது இந்த சம்பவம் நடந்ததுள்ளது. இந்த வீடியோவில் உள்ள பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா மற்றும் அவரை அடித்தாக கூறப்படும் விவசாயி பெயர் சத்ரபால் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

சமாவஜ்வாடி சாடல்
இந்நிலையில், இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தனது தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில், விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்தார். இந்த அறை எம்எல்ஏவுக்கானது அல்ல, மாறாக பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கைகள், மோசமான ஆட்சி மற்றும் எதேச்சதிகாரத்துக்கான அறை" என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

பாஜக விளக்கம்
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா விளக்கம் அளித்துள்ளார். அவரும் விவசாயி சத்ரபாலும் இது தொடர்பாக ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்த முதியவர் தன்னை அறையவில்லை என்றும் செல்லமாகவே தன்னை அடித்ததாகவும் பங்கஜ் குப்தா தெரிவித்தார். இருப்பினும், இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாகவும் விமர்சித்தார். அதேபோல அந்த முதியவரும் தனக்கும் எம்எல்ஏவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மேடையில் இருந்த எம்எல்ஏவை தான் அன்பாகத் தட்டியதாகவே கூறினார்.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
பிஎம் கிசான் ₹2,000 வராதா? இந்த 1 முக்கிய காரணத்தால் லட்சக்கணக்கானோரின் Payment நிறுத்தம்












Click it and Unblock the Notifications