சாலையில் நமாஸ் செய்த 150 பேர் மீது வழக்கு... உத்தர பிரதேசத்தில் பரபரப்பு... நடந்தது என்ன?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அனுமதியின்றி மசூதியின் முன்புள்ள ரோட்டில் நமாஸ் செய்ததாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 144யை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி , மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட சில இடங்களில் மதரீதியிலான மோதல்கள் நடந்தன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மே மாதம் 3 ம் தேதி ரம்ஜான் மற்றும் அக்ஷய திருதியை ஒரே நாளில் வர வாய்ப்புள்ளது. இதையொட்டி உத்தர பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அம்மாநில பாஜக அரசு எடுத்துள்ளது.

உபியில் முன்னெச்சரிக்கை
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கும் மே 4 வரை விடுமுறை ரத்து செய்யப்ட்டது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கவும், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.

போலீசாருக்கு அறிவுரை
மேலும் பொதுவெளியில் உரிய அனுமதியின்றி ஊர்வலங்கள், மதம்சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுக்க கூடாது. பாரம்பரியமான முறையில் நடக்கும் விஷயங்களை தாராளமாக பின்பற்றி கொள்ளலாம். ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பு அமைதி, நல்லிணக்கத்தை பேணுவது குறித்து எடுத்து கூறுவதோடு அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் எழுதி வாங்க வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

நமாஸ் செய்ய அனுமதி
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரி ரோட்டில் மசூதியின் முன்புள்ள ரோட்டில் ரமலான் மாதத்தையொட்டி இரவு 9 மணி முதல் 11 மணி வரை 5 நாள் நமாஸ் செய்ய முஸ்லிம்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் அவர்கள் அனுமதி பெற்றனர். மாவட்ட நிர்வாகம், போலீசாரும் அனுமதி வழங்கியது.

150 பேர் மீது வழக்கு
இதையடுத்து அனுமதியின்றி மசூதியின் முன்புள்ள சாலையில் நமாஸ் செய்ததாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 144யை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மசூதியின் மேலாளர் இர்பான் சலீம் கூறுகையில், ‛‛இங்குள்ள கடைக்காரர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் 40 ஆண்டுகளாக நமாஸ் செய்து வருகிறோம். ஆனால் இந்த முறை சிலரின் எதிர்ப்புகளால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications