உ.பி., ம.பி., ராஜஸ்தானில் ஒரே நாளில் பயங்கரம்.. மின்னல் தாக்கி 68 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்!
லக்னோ/போபால்/ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் மொத்தம் 68 பேர் பலியாகி உள்ளனர். இந்த துயர சம்பவங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று கனமழை கொட்டியது. அப்போது பல இடங்களில் மின்னல் தாக்கியது. இதில் மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

உ.பி.யின் பிரக்யராஜில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் 14 பேர் பலியாகினர். கான்பூர், பதேபூர் மாவட்டங்களில் மொத்தம் 10 பேர் மின்னல் தாக்கி மாண்டனர். கெளசாம்பியில் 4 பேரும் பிர்சோபாத்தில் 3 பேரும் மின்னலுக்கு பலியாகினர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவ முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளர்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஜெய்ப்பூரில் மட்டும் மின்னல் தாக்கியதில் 11 பேர் இறந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளிலும் நேற்று மின்னல் தாக்கியது. இதில் 7 பேர் மரணம் அடைந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவங்களுக்கு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications