250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா சொல்றாரே.. மோடி ஏன் கப்சிப்னு இருக்கார்.. மாயாவதி கேள்வி
லக்னோ: "பாஜக தலைவர் அமித்ஷா, 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்கிறார். ஆனால் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என புகழ்பாடும் அவரது குருவான பிரதமர் மோடியோ அமித்ஷாவின் கருத்துக்கு ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்?" என்று மாயாவதி நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதுடன் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப்படவில்லை.

கணக்கிடவில்லை
ஆனால், இதுகுறித்துக் கருத்துக் கூறிய விமானப்படை தளபதி தனோவா, "குறி வைத்துதான் தாக்குதல் நடத்தினோம். ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது கணக்கிடவில்லை" என்று சொல்லி இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

250 பேர் பலி?
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் அமித்ஷா பேசும்போது, நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறினார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருவதுதான் இப்போது விவகாரமாக மாறியிருக்கிறது.

அமித்ஷா கருத்து
இது சம்பந்தமாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாஜக தலைவர் அமித்ஷா இந்திய விமானப்படை தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்கிறார்.

ஏன் அமைதி?
ஆனால், எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என புகழ்பாடும் அவரது குருவான பிரதமர் மோடியோ, இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? தீவிரவாதிகள் கொல்லப்பட்டது என்னவோ நல்ல செய்திதான். ஆனால், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அமைதியாக ஏன் இருக்கிறார்? அமைதிக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்தான் என்ன?
|
கவலை தருகிறது
பாஜக அரசின் பொருளாதார வளர்ச்சி பயன்கள் முற்றிலுமாக ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளை சென்றடையவில்லை. இது ரொம்பவும் கவலை தரும் விஷயமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications