ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்தில் இறந்த பெண்ணுக்கும் பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளிக்கும் இடையே தொலைபேசி தொடர்பு இருந்ததாக உத்தரப்பிரதேச போலீஸார் கூறுகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு எங்கும் கண்டனங்கள் குவிகின்றன.
இந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீஸாரே பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

குற்றவாளி
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அந்த இறந்த பெண், அவரது குடும்பத்தினர், கைது செய்யப்பட்ட சந்தீப் ஆகியோரின் தொலைபேசி எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

2019ஆம் ஆண்டு
அதில் பல திடுக் தகவல்கள் கிடைத்ததாக போலீஸார் கூறுகிறார்கள். அதாவது சந்தீப்பிற்கும் இறந்த அந்த பெண்ணிற்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்து வந்ததாக கூறியுள்ளார்கள். மேலும் இந்த பேச்சுவார்த்தை அக்டோபர் 13, 2019-ஆம் ஆண்டு முதல் தொடங்கியதாம்.

62 அவுட் கோயிங்
இருவருக்குமிடையே 104 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன. அதில் 62 அவுட்கோயிங், 42 இன்கம்மிங் ஆகும். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளார்கள். இந்த உரையாடல்கள் 15 நிமிடங்களுக்கும் மேல் நீடித்ததாகவும் கூறுகிறார்கள்.

15 நிமிடங்கள்
அது போல் பெண்ணின் குடும்பத்தினருடனும் சந்தீப் தொலைபேசியில் உரையாடியது தெரியவந்தது. இவர்களும் 15 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளது தெரியவருகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என போலீஸார் கூறுகிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications