"இன்னும் இருபதே மாசம்.. அமெரிக்காவுக்கு நிகராக உ.பி சாலைகள் மாறும் பாருங்க!" அமைச்சர் நிதின் கட்கரி
உத்தரப் பிரதேசத்தில் ₹6,500 கோடி மதிப்பிலான ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
லக்னோ: அடுத்தாண்டு இறுதிக்குள் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் சாலை உட்கட்டமைப்புகள் அமெரிக்காவைப் போல மாறும் என்றும் இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. அங்கு இப்போது பல்வேறு சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ₹6,500 கோடி மதிப்பிலான கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை உட்பட ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

உத்தர பிரதேசம்
2024ஆம் ஆண்டு இறுதிக்குள், உத்தரப் பிரதேசத்தில் அமெரிக்காவைப் போன்று சாலைக் கட்டமைப்புகள் இருக்கும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "நான் சொன்னதைச் செய்வேன். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இத்திட்டங்களுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் சூழல் மாறும்.. எப்போதும் சாலைகள் மூலமே வளர்ச்சி ஏற்படும். இப்போது பல்லியாவிலிருந்து பாட்னாவை அடைய நான்கு மணி நேரம் ஆகிறது.. இந்த கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால், ஒரு மணி நேரத்தில் பாட்னாவை அடைய முடியும்.

நெடுஞ்சாலைகள்
2014இல் பார்த்தோம் என்றால்.. உத்தரப் பிரதேச சாலைகளின் நிலை மோசமானதாக இருந்தது.. அப்போது உத்தரப் பிரதேசத்தில் 7,643 கி.மீ தேசிய நெடுஞ்சாலை மட்டுமே இருந்தது. இப்போது நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 13,000 கி.மீ தேசிய நெஞ்சாலைகள் இங்கு உள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தில் அமெரிக்காவைப் போன்று சாலை கட்டமைப்பு வசதிகள் இருக்கும். மாநிலம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த புதிய சாலைகள் வளர்ச்சியை அதிகரிக்கும்.

விவசாயிகள்
மாநிலத்தில் கிராம மக்களும் ஏழைகளும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருப்பார்கள்.. விவசாயிகள் உணவுகளை வழங்குவது மட்டுமின்றி, ஆற்றல் உற்பத்தியாளராகவும் மாற வேண்டும்.. எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.. பல்லியா இணைப்பு விரைவுச்சாலை அமைப்பதன் மூலம் லக்னோவிலிருந்து பூர்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நான்கரை மணி நேரத்தில் பாட்னாவை அடைய முடியும்.

எளிதாக சந்தைக்கு எடுத்து செல்லலாம்
பல்லியா முதல் பக்ஸர்வுக்கு அரை மணி நேரத்திலும், பல்லியாவிலிருந்து சாப்ராவுக்கு ஒரு மணி நேரத்திலும் அடையலாம். கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை அமைப்பதன் மூலம், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் நகரங்கள் பீகாரில் உள்ள சாப்ரா, பாட்னா மற்றும் பக்சர் ஆகியவற்றுடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்லியா விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னாவில் இருக்கும் சந்தைகளுக்கு எளிதாக எடுத்துச் செல்லலாம்.

புதிய திட்டங்கள்
130 கோடி செலவில் சந்தௌலியில் இருந்து மொஹானியா வரை அமைக்கப்படும் புதிய சாலை, டெல்லி- கொல்கத்தா ஜிடி சாலை வழியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சண்டௌலி மற்றும் பீகாரில் உள்ள கைமூர் மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. சைத்பூர் முதல் மர்தாக் சாலை அமைப்பதன் மூலம், மௌவிலிருந்து வாரணாசிக்கு சைத்பூர் வழியாக நேரடியாகச் செல்ல முடியும். இதுபோன்ற சிறந்த சாலை வசதிகள் மூலம் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்படும். பின்தங்கிய மாவட்டங்களுக்கும் நல்ல சாலை வசதி கிடைக்கும்" என்றார்.

யோகி ஆதித்யநாத் நன்றி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்படும் இந்த புதிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் உங்கள் (கட்கரி) ஒத்துழைப்பால், உத்தரப் பிரதேசம் உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகள் கிடைக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி வேகமடைகிறது" என்றார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications