ஹிஜாப்புக்கு பதில்.. வேறு எங்காவது நிதிஷ் குமார் தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? உத்தர பிரதேச அமைச்சர் சர்ச்சை
லக்னோ: ‛‛பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் மனிதர் தானே. இந்த விஷயத்திற்காக அவரை இப்படியெல்லால் துரத்தக்கூடாது. 'ஹிஜாப்'பை தொட்டதற்கே இவ்வளவு பெரிய அமளி ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?'' என்று உத்தர பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிசாத் கூறியிருப்பது அடுத்த சர்ச்சையாக மாறி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அரசு விழாவில் இஸ்லாமிய பெண் டாக்டர் ஹிஜாப் அணிந்து வந்தார்.

அப்போது நிதிஷ் குமார் அவரது ஹிஜாப்பை கீழே இழுத்து முகத்தை பார்த்தது சர்ச்சையைானது. காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் நிதிஷ் குமாரை கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண்ணை மானப்பங்கம் செய்துள்ளதாக கர்நாடகா உள்பட பல இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு தற்போது பாஜக அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த அமைச்சரின் பெயர் சஞ்சய் நிசாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர் நிசாத் எனும் கட்சியை தொடங்கி உள்ளார். நிசாத் என்பது ஜாதியின் பெயராகும். ஜாதி கட்சியை வைத்துள்ள சஞ்சய் நிசாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் உத்தர பிரதேச மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக (எம்எல்சி) உள்ளதோடு, கேபினட் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஹிஜாப் சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சஞ்சய் நிசாத், ‛‛அவரும் (நிதிஷ் குமார்) மனிதர் தானே. இந்த விஷயத்திற்காக அவரை இப்படியெல்லால் துரத்தக்கூடாது. 'ஹிஜாப்'பை தொட்டதற்கே இவ்வளவு பெரிய அமளி ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று கூறி சிரித்தார்.
சஞ்சய் நிசாத்தின் கருத்து இப்போது சர்ச்சையாகி உள்ளது. எரியுற எண்ணெயில் எண்ணெய் ஊற்றுவது போல் அவரது கருத்து உள்ளதாக கூறி எதிர்க்கட்சியினர் அவரது கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அஸ்லம் செய்க் கூறுகையில், ‛‛சஞ்சய் நிசாத்தின் கருத்து மிகவும் இழிவானது. பெண் மீதான வெறுப்பு நிறைந்த கருத்தாக உள்ளது. ஹிஜாப் முஸ்லிம் பெண்களுக்கு புனிதமான ஒன்றாகும். அதை மீறுவது என்பது அத்தகைய புனிதத்தின் மீதான தாக்குதலாகும்.
அதனை கிண்டல் செய்வது அருவருப்பானது. இத்தகைய மனநிலை தான் பாஜகவின் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக கருதாதற்கு முக்கிய காரணமாகும். பெண் குழந்தைகளை காப்போம்.. பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது பாஜகவின் வெற்று கோஷமாக தான் உள்ளது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதையடுத்து சஞ்சய் நிசாத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியயின் சுமையா ராணா போலீசில் புகார் செய்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications