உ.பி.யில் 3000 டன் தங்கப் படிமங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஜிஎஸ்ஐ ஆய்வு நிறுவனம் மறுப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 3000 டன் தங்கப் படிமங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பர்தாவில் 2,943 டன் தங்கமும், ஹார்டி என்ற பகுதியில் 646 டன் தங்கமும் இருப்பதாக செய்திகள் வெளியாகின. தங்கம் மட்டுமல்லாமல் மற்ற சில கனிமங்களும் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதனால் இந்தியாவில் தங்கத்தின் கையிருப்பு தற்போதைய நிலையை விட 5 மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்பட்டது.

ஏலம் விடும்
இதுகுறித்து சோன்பத்ரா மாவட்ட சுரங்கத்துறை அதிகாரி ராய் கூறுகையில் சோன்பத்ராவில் தங்க படிமங்களை கண்டறியும் பணிகள் கடந்த 1992-1993-இல் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டது. ஹார்தி மற்றும் சோன்பத்ரா பகுதிகளில் தங்கச் சுரங்கம் இருப்பது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ டென்டர் மூலம் சுரங்கங்களை ஏலம் விடும் பணி விரைவில் தொடங்கும் என கூறியிருந்தார்.

தங்கத்தை தேடி
ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த போதே இந்த சோன்பத்ரா பகுதியில் தங்கம் இருந்திருக்கலாம் என யூகித்துள்ளார்கள். இதை உண்மையாக்க அவர்கள் சோன்பத்ராவில் தங்கத்தை தேடியதாகவும் கூறப்படுகிறது. பிடிஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆய்வு
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மாவட்ட சுரங்க அதிகாரிகள் சொன்னது போல உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் 3000 டன் அளவுக்கெல்லாம் தங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உ.பி. மாநிலத்தில் கடந்த 1998-99 மற்றும் 1999- 2000 ஆண்டுகளில் தங்க படிமங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டோம்.
|
இந்திய புவியியல் ஆய்வு
அப்படி அங்கு தங்கப் படிமங்கள் இருப்பதாக தெரியவந்தால் அதுகுறித்து மாநில அரசுகளிடம் தெரிவிப்போம். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து அந்த மாநில சுரங்கத் துறைக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு தங்கம் இருப்பதாக சாதகமான சூழலி நிலவவில்லை என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications